Friday, July 15, 2011




இதழ்  பகுதி 1

பல்கலைக்கழகம்- தமிழியல் ஆய்வு - தமிழ் கற்பித்தல் :திறந்த உரையாடல்

வீ அரசு 


உரையாடியவர்: சண்முகம் சரவணன்





கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறீர்கள். இந்தப் பின்புலத்தை அடிப் படையாகக் கொண்டு, உங்கள் ஆய்வுப்பணி பற்றி உரையாடலாம் என்று நினைக்கிறேன். உங்கள் ஆய்வு எப்படித் தொடங்கியது.

1985 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகச் சேருவதற்கு முன்பு எனது ஆய்வுக்கான அடிப் படைகள் உருவாயின. 1979இல் சென்னை நகருக்கு வந்தடைந்தபின் இதற்கு முன் இருந்த உலகத்திலிருந்து வேறொரு உலகத்தில் நுழைகிறோம் என்ற உணர்வுக்கு ஆட்பட்டேன். பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஃபில் ஆய்வுப் படிப்பிற்குச் சேர்ந்தேன். விந்தன் பற்றி ஆய்வு செய்யும் திட்டத்தை பேரா.இரா.இளவரசு என்னிடம் கூறினார். எம்.ஃபில் படிப்பில் விந்தன் பற்றிய மிக விரிவான வாசிப்பு எனக்குக் கிடைத்தது. கோவிந்தன் எனப்படும் விந்தன் தமிழ்ப் படைப்பாளிகளுள் வேறு பட்ட தன்மைகளைக் கொண்டிருந்தவர். உதிரிப்பாட்டாளி மக்கள் குறித்து ஆழ்ந்த அக்கறையோடு படைப்புக்களில் பதிவு செய்தவர். அச்சுத் தொழிலாளியாக வாழத் தொடங்கி எழுத்தாளரானவர். அவருடைய தொடக்ககால எழுத்துப் பணிகளுக்கு கல்கி உற்சாகம் அளித்திருக்கிறார். கல்கி குறித்து என்னை மனிதனாக்கிய மனிதன் என்று விந்தன் எழுதியுள்ளார். ஆழ்ந்த மனிதாபிமானப் பண்புகளை வெளிப்படுத்தும் எள்ளல் மொழியில் கதைகளை எழுதியவர் விந்தன். இடதுசாரி மனநிலை உடையவர் களிடம் நெருக்கமாகப் பழகியவர். தமிழொளி, குயிலன், ஜெயகாந்தன் ஆகியோர் இவரது நண்பர்கள். 1954 இல் கார்க்கியின் படத்தை அட்டையில் போட்டு மனிதன் என்ற பத்திரிகையைக் கொண்டு வந்தார். சுமார் பத்து இதழ்கள் வந்தன. தெருவில் வாழும் பாட்டாளி மக்கள் குறித்து தனது மனிதன் இதழில் Ôஇதோ ஒரு சுயமரியாதைக் காரன்Õ என்னும் தொடரை எழுதினார். இடதுசாரி அமைப்பு களோடு அவருக்கு நெருக்கமான தொடர்பு இல்லா விடினும் இடதுசாரி மனநிலையோடு அவரது ஆக்கங்கள் வெளிவந்தன.

விந்தனின் இத்தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு, அவரைக் குறித்த ஆய்வேடு ஒன்றை உருவாக்கினேன். ம.பொ.சி. முதன்மைப்படுத்திய தமிழ்த் தேசீயம், பெரியார் செயல்பட்ட சுயமரியாதை இயக்கம், அதன் தொடர்ச்சியாக உருவான பல்வேறு திராவிட இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள் ஆகியவை குறித்த விரிவான வாசிப்பை இக்காலங்களில் நிகழ்த்துவதற்கு, எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்தப் பின்புலத்தில்தான் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்யப்போனேன்.

முனைவர் பட்டத்தில் எவ்வகையான ஆய்வை மேற்கொண்டீர்கள்.

இடதுசாரிகருத்துநிலையின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த மனநிலை அப்போது. சோசலிச எதார்த்த வாதம் தமிழ்ச்சூழலில் செயல்பட்ட முறை குறித்து ஆய்வு செய்ய விரும்பினேன். சமூக முரண்பாடுகளுக்கும் ஆக்க இலக்கியத்திற்கும் உள்ள உறவுகளைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். இடதுசாரி கருத்துநிலைகளைக் கொண்ட படைப்பாளிகளின் ஆக்கங்களைத் தேடிப் படித்து வந்தேன். எனது ஆசிரியர் தா.வே.வீராசாமி, தொ.மு.சி. ரகுநாதன் பற்றி ஆய்வு செய்யும் திட்டத்தை என்னிடம் கூறினார். அவரது முழு ஆக்கங்களையும் மதிப்பீடு செய்யும் நோக்கில் வாசித்தேன். ஆனால் எனது ஆசிரியர், தொ.மு.சி.யின் சிறுகதைகள் குறித்து மட்டும் எழுதச் சொன்னார். தொ.மு.சி. யின் Ôஇலக்கிய விமர்சனம்Õ தமிழில் எழுதப்பட்ட முதல் விமர்சன ஆக்கம். அதில் அவர் சோசலிச எதார்த்தவாதத்தை, விமரிசன சோசலிச எதார்த்தவாதமாக உரையாடலுக்கு உட்படுத்தியிருப்பார். உலகச் சூழலில் சோசலிச எதார்த்த வாதம் என்பது 1934இல் மார்க்சிம் கார்க்கியால் முன்னெடுக்கப்பட்டு உலகம் முழுவதுமுள்ள சோசலிச கருத்துநிலையில் சார்புடையவர்களை இணைத்து, மாநாடு ஒன்றை மாஸ்கோவில் நடத்தினார். மனிதனை முதன்மைப்படுத்தும் ஆக்கங்களை சோசலிச எதார்த்த வாத எழுத்தாகக் கட்டமைத்தனர். மதக்கருத்துநிலைகள் ஆதிக்கம் செலுத்திய உலகில், அதற்கு மாற்றாக - கடவுளுக்கு மாற்றாக மனிதனை முதன்மைப்படுத்தும் ஆக்க இலக்கியங்கள் சோசலிச எதார்த்தவாத இலக்கியங்கள் என்று கருதப்பட்டன. இதனை தொ.மு.சி. முழுமையாக ஏற்றுக்கொள்ளாமல், சோசலிச எதார்த்தத்தையும் விமரிசனக் கண்ணோட்டத்தில் வெளிப்படுத்தும், விமரிசன சோசலிச எதார்த்தவாதக் கோட்பாட்டை அடிப் படையாகக் கொண்டு, படைப்புலகில் செயல்பட்டார்.
இவ்வகையில் விந்தன், தொ.மு.சி.ரகுநாதன் ஆகியவர்களை வாசிப்பதில் தொடங்கி தமிழ்ச்சூழலின், குறிப்பாக 1915-1975 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தின் இயக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு முற்பட்டேன். சுயமரியாதை இயக்கம், இடதுசாரி இயக்கம் ஆகியவை செயல்படுவதில் காங்கிரஸ் கட்சி போன்ற அதிகார அமைப்புகள் செயல்படுத்திய நடைமுறைத்தந்திரங்கள் குறித்தும் வாசித்து அறிந்தேன். உலகம் முழுவதும் செயல்பட்டு வந்த இடதுசாரி அமைப்புகள், தமிழக இடதுசாரி அமைப்புகள், பெரியார் உருவாக்கிய சுய மரியாதை இயக்கம் ஆகியவை குறித்து அறிந்துகொள்வதில் அக்கறையோடு எனது ஆய்வுகளைச் செய்துவந்தேன்.
மேற்குறித்த தன்மைகள், தமிழக அச்சு ஊடக வழி உருவான இதழ்கள் மற்றும் புனைவுகளில் இடம் பெற்றிருக்கும் போக்குகளை அறிந்துகொள்ளும் நோக்கத்தில் வாசித்தேன். இதழ்களைத் தேடிப் படிப்பதில் ஆர்வம் மிகுதியாக உருவானது. பழைய இதழ்களை முழுமையாகச் சேர்த்து வாசிப்பதைப் பழக்கமாகக் கொண்டேன். அதன் மூலம் தமிழகத்தில் செயல்பட்ட வ.உ.சி. பெரியார், திரு.வி.க. ம.பொ.சி. சிங்காரவேலர், ஜீவானந்தம், விந்தன், தமிழொளி, ஜெயகாந்தன் ஆகியோர் குறித்து விரிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த மன நிலையில், புதுமைப்பித்தன், வ.ரா. கு.அழகிரிசாமி, கு.ப.ரா., க.நா.சு., சி.சு.செல்லப்பா ஆகியோர் செயல் பாடுகளையும் புரிந்துகொள்ளத் தொடங்கினேன். தமிழ்ச் சமூகத்தின் அசைவியக்கத்தை அச்சுவழி உருவான ஆக்கங்களை ஆதாரமாகக் கொண்டு எப்படிப் புரிந்து கொள்வது என்பதை அடிப்படையாகக் கொண்டேன். அதுவே எனது ஆய்வின் அடிப்படையாக அமைந்தது.
சோசலிச எதார்த்தவாதம் பேசியவர்களும் அதனை மறுத்தவர்களும் தமிழ்ச் சமூக அசைவியக்கத்தில் எப்படிப் பங்கு பெறுகிறார்கள்? என்ற கேள்வியை எழுப்புவது தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது.

சரி ; இந்தப் போக்கை எப்படி மதிப்பீடு செய்து புரிந்துகொண்டீர்கள்.

தனிப்பட்ட மனிதர்களை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படும் கருத்துநிலைகளே தமிழ்ச் சூழலில் ஆதிக்கம் செலுத்துவதைக் காண்கிறோம். தனமனித வழிபாடு தமிழ்ச் சமூகத்தின் உளவியல் நோயாக இருக்கின்றது. இந்நிலைக்கு மாற்றாக, மனிதர்கள் செயல்பட்ட கருத்து நிலைகள், அதோடு தொடர்புடைய இயக்கங்கள், அந்த அடிப்படையில் உருவான ஆக்கங்கள் என்ற புரிதல் முக்கியமானது. எனது ஆய்வுகளை இந்தப் பின்புலத்தில் நிகழ்த்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டேன். எனக்குக் கிடைத்த நிறுவனவயப்பட்ட ஆய்வுப் பயிற்சி முறைகளில் இத்தன்மையை நடைமுறைப்படுத்தினேன். இதன் மூலம் தனிப்பட்ட மனிதர்களின் நேர்மை, உழைப்பு ஆகியவற்றை வேறாகவும் அவர்களது கருத்து நிலைகளை வேறாகவும் புரிந்துகொள்ளும் பயிற்சி எனக்கு ஏற்பட்டது. க.நா.சு., சி.சு.செல்லப்பா ஆகிய சில மனிதர்களின் நேர்மை, உழைப்பு ஆகியவை குறித்து அளவு கடந்த மரியாதை எனக்கு உண்டு. ஆனால் அவர்களது கருத்துநிலை தமிழ்ச்சமூக அசைவியக்கத்திற்கு எவ்வகையில் பயன்பட்டது என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு. இவ்வகையான புரிதலின்றி அவர்களது செயல் பாட்டையும் கருத்துநிலையும் ஒன்றாகப்போட்டுக் குழப்பிக் கொள்ளும் வாசகர்கள் தமிழ்ச் சமூகத்தில் மிகுதி.

இவ்வகையான புரிதல், உங்களது ஆசிரியப் பணியில் எத்தகைய செல்வாக்கு செலுத்தியது.

தமிழ் ஆசிரியர்களாக இருப்பவர்கள், சமகால நிகழ்வுகளில் கவனம் செலுத்துவது குறைவு. தமிழ் படித்தவர்களின் குறையும் நிறையுமாக அமைவது, பண்டைத் தமிழ் இலக்கிய இலக்கண சமய மரபுகளை மட்டுமே கவனத்தில் கொள்வதும் சமகாலத்தை மறுப்பதும், தப்பித்தவறி சமகாலம்பற்றிப் பேசினால் வெகு கொச்சையாகப் புரிந்துகொள்வது என்பது தமிழ்ச் சூழலில், தமிழாசிரியர்கள் பெரும்பகுதியினரிடம் காணப்படும் தன்மையாகும். இதனால், சமகாலம் குறித்த ஆக்கங்களை முதன்மைப் படுத்திப் பேசும் மனநிலை எனக்கு ஏற்பட்டது. சமகாலம் குறித்துப் பேசினால், தவிர்க்கமுடியாமல் கருத்துநிலைச்சார்பு சார்ந்த அடையாளம் உருவாவது தவிர்க்க முடியாது. அடையாளத்தோடு செயல்படும் ஆசிரியரை, ஆசிரியர் சமூகம் ஏற்றுக்கொள்வதற்குக் கொஞ்சம் காலம் பிடிக்கும். குறிப்பிட்ட ஆசிரியரின் அடையாளத்தின் மீதான விருப்பு - வெறுப்புகள் உருப்பெறும். இப்படித் தான், எனது ஆய்வுப் பார்வை என்பதை விட எனது அடையாளத்தை முதன்மைப்படுத்திப் புரிந்துகொள்ளப் பட்டேன். ஆனால், எனது மாணவர்களிடம் இவ் வகையான அடையாளம் புரிந்துகொள்ளப்பட்ட முறை வேறாக இருந்தது. மனிதாபிமானம் சார்ந்த செயல் பாடுகளே நம்மை அடையாளப்படுத்தும். மாணவர் களோடு செயல்படுவது என்பதில் பல்வேறுபட்ட முறை மைகளைத் தெரிந்தோ தெரியாமலோ கைக்கொண்டேன்

அப்படியானால் உங்களுடைய பாடத்திட்டத் திற்கும் உங்களுடைய செயல்பாடுகளுக்கும் முரண்பாடு உருவாகவில்லையா...

கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்திற்குள் மட்டும் நான் செயல்படவில்லை. இதனை எப்படி விளக்குவது என்று எனக்குப் புரியவில்லை. என்னிடம் ஆய்வுசெய்து முப்பத்தைந்து பேருக்கு மேல் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு, எனது ஆசிரியப்பணி வழி நிகழ்ந்தவைகளை மதிப்பீடு செய்வோம். இவர்கள் நல்ல ஆசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள். தாங்கள் செய்யும் பணியில் விருப்பத்துடன் இருக்கிறார்கள். தங்கள் பணியை ஏதோ நெருக்கடியில் செய்கிறார்கள் என்றில்லை; ஈடுபாட்டுடன் செய்கிறார்கள். தாங்கள் கற்றறிந்தவற்றில் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஏதோ பிழைப்புக்காக செய்தோம் என்றில்லை. நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் ஆய்வு என்பது வெறும் பிழைப்பிற்காகவே உள்ளது. இது எவ்வகையில் சாத்தியமானது எனில், வகுப்பறையையும் புறஉலகையும் வேறுவேறாக இல்லாமல் செயல்பட்டோம். புற உலகச் செயல்பாடுகளுக்கான அங்கீரிக்கப்பட்ட தொழில் கேந்திரங்களாக, வகுப்பறைகளைக் கட்டமைத்தோம். இத்தன்மையிலிருந்து எனது ஆய்வுகள் உருவாயின.

அவ்வகையில் எவ்வகையான ஆய்வுகளை உங்கள் மாணவர்களிடத்தில் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள் என்று கூறமுடியுமா...

இதற்கு மிக விரிவாகப் பேச வேண்டும். சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன். இந்த ஆய்வுகளைப்பற்றிச் சொல்லுவதற்கு முன், இவ்வகையான ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்கு எவ்வகையான அடிப்படைகளைக் கைக்கொள்கிறோம் என்பதைச் சொல்லிவிடுகிறேன்.
  • ஆய்வு என்பது எதுவாக இருந்தாலும் அது சமகாலச் சூழலில் உரையாடலுக்கு உட்படுத்த வேண்டும்.
  • ஆய்விற்கான ஆவணங்கள் குறித்த தேடுதலில் ஈடுபாடு முதன்மையாக இருக்க வேண்டும்
  • ஆய்வு மேற்கொள்வோர் அத்துறை தொடர்பான வாழ்நாள் சார்ந்த உரையாடலில், செயல்படுபவராக இருப்பதற்கான மனநிலை உருவாக வேண்டும்.

எனது ஆய்வுகள், எனது ஆய்வு மாணவர்களோடு மேற்குறித்த வகையில் தான் நிகழ்ந்துகொண்டு இருப்பதாகக் கருதுகிறேன். இதனைச் சில எடுத்துக் காட்டுகள் மூலம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
சமூக நடைமுறையில் புதிதுபுதிதான விஷயங்கள் அவ்வப்போது தோன்றிக் கொண்டே இருக்கும். அவ் வகையான தன்மைகளில் ஒன்று, பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான அச்சு ஊடகம். இவ்வூடகம் என்பது பல பரிமாணங்களில் செயல்படுகிறது. இதிலிருந்து உரைநடை வந்தது; இதிலிருந்து புனைகதை வந்தது; இதிலிருந்து இதழியல் வந்தது; இதிலிருந்து புத்தகங்கள் உருவாக்கப்பட்டன; அதன் மூலம் தான் வாசிப்பு என்பது உருவானது. வாசிப்புப் பழக்கத்திற்கு அதுவே மூலதனம். வாசிப்புப் பழக்கத்திற்கும் எழுத்துப் பயிற்சிக்கும் ஏற்ற வகையில் அது செயல்படுகிறது. இதிலிருந்து உருவான நிறுவனம்தான் நூலகம். நூலகத்திற்கும் வாசிப்பிற்குமான உறவு... அது சார்ந்து உருப்பெறும் புலமைத்தளம்... இப்படி அச்சு ஊடகத்தின் தொடர்ச்சி; மற்றும் அதன் பரிமாணம் வளர்ந்து கொண்டே போகும். எனது ஆய்வு, மாணவ நண்பர் களோடு மேற்குறித்த பரிமாணத்தில்தான் போய்க் கொண்டே இருக்கும்.
வாய்மொழி ஊடகம், காட்சி ஊடகம், கேட்பு ஊடகம், மின் ஊடகம் ஆகியவை குறித்து விரித்துக் கொண்டே போகலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி, கல்வி அறிவு என்பதும் ஊடக அறிவு என்பதும் ஒன்றுக்குள் ஒன்று இணைந்தது. சமூக நிகழ்வுகள் என்பது ஊடக நிகழ்வுகளாக அமைந்துள்ளன. சமூகத்தைப் படிப்பது ஊடகத்தைப் படிப்பதுதான்.
தொல்காப்பியத்தைப் படிப்பதும் தினத்தந்தியை வாசிப்பதும் சமநிலையில் அமைய வேண்டும். இரண்டிற்குமான சமூகக் காரணங்கள்பற்றிய புரிதல், தமிழ்ப்படிப்பின், தமிழ் ஆய்வின் அடிப்படையாக அமைய வேண்டும். இந்தப் பின்புலத்தில்தான் எங்கள் ஆய்வுகள் நிகழ்ந்துகொண்டுள்ளன. நானும் எனது ஆய்வு மாணவர்களும் தொல்காப்பியத்தை - சங்க இலக்கியத்தைப் படிக்கும் மனநிலையில் புதுமைப்பித்தனை வாசிக்கிறோம். அடிப்படையில் வேறுபாடில்லை. எங்களது ஆய்வு மனநிலையின் தன்மை இதுதான்.

ஊடக ஆய்வில் எவ்வகையான ஊடகம் பற்றிக் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளீர்கள்.

சிறுபத்திரிகை ஊடகம்பற்றி என்று கூறலாம். நான் ஆய்வு மாணவனாக இருந்த காலத்தில் தமிழில், சிறு பத்திரிகைகள் குறித்த விரிவான விவரணங்களைத் தொகுத்தேன். அவற்றைத் தேடிச் சேகரிப்பதில் ஆர்வம் கொண்டேன். பழைய புத்தகக் கடைகளில் நிறைய தேடி வாங்கினேன். அது ஒரு நோயாகக்கூடப் பற்றிக் கொண்டது. இந்த நோயில் 1981 முதல் எனது சக கூட்டாளி கோணங்கி. எனது சொந்த நூலகத்தில் 1970-2010 இடைப்பட்ட நாற்பதாண்டு காலத் தெரிவு செய்யப்பட்ட சிறுபத்திரிகைகள் சுமார் 400 உள்ளன. இவை கட்டப்பட்ட தொகுப்புகளாக சுமார் 850 தொகுப்புகள் உள்ளன. எனது மாணவர்களிடம் இவை தொடர்பான ஆய்வின் மூலம், சமூகத்தின் வேறுபட்ட அச்சு நிகழ்வின் அரசியல் புரிந்துணர்வை உருவாக்க வாய்ப்பு ஏற்பட்டது. அவைகளை வாசிக்கும் சிறு பத்திரிகை வாசிப்புவட்டம் முதுகலையில் ஒருதாள்; பல்வேறு திட்டக்கட்டுரைகள்; எனச் செயல்பட்டிருக் கிறோம்.
எனது சிறுபத்திரிகை அரசியல் என்னும் கங்கு வரிசைக் குறுநூலில் 1930-2000 ஆண்டுகளுக்கிடையில் செயல்பட்ட தமிழ்ச்சமூகத்திற்கும் இக்காலங்களில் வெளிவந்த சிறுபத்திரிகைக்குமான உறவை, வரலாற்றுப் பின்புலத்தோடு பதிவு செய்துள்ளேன். காலஒழுங்கில், சிறுபத்திரிகை உருவாக்கத்திற்கும் தமிழ்ச்சமூகத்தின் நிகழ்வுகளுக்குமான தொடர்பை மதிப்பீடு செய்துள்ளேன். தமிழகத்தில் செயல்பட்ட இடதுசாரி இயக்கம், சுயமரியாதை இயக்கம், தூசிப்படை அமைப்புகள், விளம்பரம் என்னும் சந்தைச் செயல் பாட்டிற்கும் சிறுபத்திரிகைக்குமான உறவு எனப் பல பரிமாணங்களைப் பதிவு செய்துள்ளேன். இவ்வகையில், சமூகச் செயல்பாடுகளில் மாற்றாகச் செயல்படுவது குறித்த பதிவே எங்களது ஆய்வாக அமைந்திருக்கிறது.

அண்மைக்காலங்களில் பதிப்பு மற்றும் பதிப்பின் அரசியல் என்று உங்கள் மாணவர்கள் அதிகம் பேசுகிறார்களே... அதைப்பற்றி...

நான் முன்னர் குறிப்பிட்டதைப்போல், பதிப்பு என்பதை, அச்சு உருவாக்கத்தின் மூலம் ஏற்பட்ட ஒரு சமூக விளைவு என்று நாங்கள் பார்க்கிறோம். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் பாடத்திலும் ஆய்விலும் சுவடிகள், கல்வெட்டுக்கள், வாய்மொழி மரபுகள் ஆகியவற்றுக்கு முதன்மை தரும் தொல்லியல் ஆய்வுகளைத் தமிழ்ப்படிப்பின் ஒரு பகுதியாகவே பார்க்கிறோம். இத்துறை சார்ந்த பட்டயப்படிப்புகளை பேரா.ந.சஞ்சீவி உருவாக்கினார். அதனை நாங்கள் விரிவுபடுத்தி வருகிறோம்.
ஒரு சுவடியிலிருந்து நூல் ஒன்று உருவாகும்போது அது அக்கால சமூக நிகழ்வோடு இணைந்துதான் வெளிப் படுகிறது. பல தருணங்களில் பேசியுள்ள, எழுதியுள்ள செய்தி ஒன்றை இங்கு மீண்டும் நினைவுபடுத்தலாம். 1850களில் சங்க இலக்கியச் சுவடிகள் ஆறுமுகநாவலர் சேகரிப்பில் இடம்பெற்றிருந்தன. அவற்றில் அவர் திருமுருகாற்றுப்படையை (1851) மட்டுமே பதிப்பித்து உள்ளார். பிறவற்றைப் பதிப்பிக்கவில்லை. சைவ சமய நூல்களில் இருந்த அக்கறை, சங்க நூல்களில் அவருக்கு இருக்க வாய்ப்பில்லை என்பது சமூக எதார்த்தம். அவர் அன்று அவற்றைப் பதிப்பித்து இருப்பாரெனில், தமிழ்ச்சமூகத்தில் தமிழ்த்தாத்தா என்ற ஒருவர் உருவாகியிருக்கவே முடியாதல்லவா?
இவ்வகையில் சமயம், சாதி, இனக்குழுக்கள், தனிநபர் சார்புகள் எனப் பல நிலைகளில் பதிப்பு வரலாற்றை எங்களது மாணவர்கள் உரையாடலுக்கு உட்படுத்தியுள்ளார்கள். தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய ஆக்கங்கள், அச்சாக்கம் பெற்றதன் மூலம் உருவான தமிழ்ச் சமூகத்தின் வரலாறு குறித்து, நாங்கள் நிறைய எழுதி வருகிறோம். பதிப்பு என்பது தமிழ்ச்சமூக வரலாற்றின் போக்குகளைக் கண்டறிய உதவும் ஆவணமாகப் பார்க்கிறோம். சுவடிகளிலிருந்து நூல்கள் உருவான வரலாறு தமிழ் இலக்கிய வரலாற்றின் முக்கியமான பகுதி. ஆனால் அத்தன்மை நமது ஆய்விலும் பாடத்திலும் இன்னும் இடம்பெறவில்லை. கடுமையாக உழைத்து சங்க நூல்களை வெளிக்கொண்டு வந்த உ.வே.சா.விற்கு மிகப்பெரும் ஒளிவட்டத்தைக் கட்டுகிறோம். அது நமது மரபு; தவறில்லை; ஆனால் அப்பதிப்பின் மூலம் தமிழ்ச்சமூக வரலாற்றுப் புரிதலில் ஏற்பட்ட புதிய விளைவுகள் குறித்து அறியவில்லை. அதனையே நாங்கள் பதிப்பு அரசியல் என்று குறிக்கிறோம்.
அச்சான தமிழ்ப்பிரதிகள் அனைத்துகுறித்தும் இவ்வகையான உரையாடலை நிகழ்த்த முடியும். விரிவான உரையாடலைப் Ôபாரதிப்புத்தக நிறுவனம்Õ, Ôபுதிய புத்தகம் பேசுதுÕ என்ற இதழின் சிறப்பு மலராக வெளியிட்டுள்ள இரு தொகுதிகளில் காணலாம். அவற்றில் பல கட்டுரைகள் எம்துறை ஆய்வு மாணவர்கள் எழுதியுள்ளனர். இதற்கு அம்மலரின் பொறுப்பாசிரியர் தோழர் நாகராசன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

பதிப்பு அரசியல் என்ற ஆய்வுப்புலத்தைப் போலவே தொகுப்பு அரசியல் என்று அடிக்கடி உச்சரிக்கிறீர்களே! அதற்கு என்ன பொருள்!

ஆம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சைவப்பின்புலத்தில் பதினெட்டு சித்தர்களின் பாடல் களை Ôபெரிய ஞானக்கோவைÕ என்று தொகுத்து வெளி யிட்டார்கள். இதற்கு முன் இப்படித் தொகுப்பு இல்லை. சித்தர்கள் என்ற தனிவகையும் பெரிதாகப் பேசப்படவில்லை. ஆனால், 1959 இல் Ôசித்தர் பெரிய ஞானக்கோவை என வழங்கும் சித்தர் பாடல்கள்Õ என்ற பெயரில் அரு.ராமநாதன் வெளியிட்டார். 1976இல் Ôசித்தர் பாடல்கள்Õ என்னும் புதுப்பெயரைக் கொடுத்து த.கோவிந்தன் தொகுப்பு ஒன்றைக் கொண்டுவந்தார். இவர் மூன்று புதிய சித்தர்களைக் கண்டுபிடித்தார். உலகாயதச் சித்தர், காரைச்சித்தர், தடங்கண் சித்தர் என்பவர்கள் அந்த மூவர். இவர்கள் முறையே கோவேந்தன், பாரதி தாசன், ம.இலெ.தங்கப்பா ஆகியோர். இவர்களுக்குப் புனைபெயர் கொடுத்து, தானே பாட்டுக்களை எழுதி, சித்தர் தொகுப்பில் இணைத்துவிட்டார்.  (விரிவுக்குப் பார்க்க; பக்தி - அநுபவம் - அரசியல். தொகுப்பு நூல். ப.182) இந்தச் சித்தர்களை 16-18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாக சித்தர்பற்றி எழுதுபவர்கள் ஆய்வு செய்கிறார்கள். இதனைத் தொகுப்பு அரசியல் என்று கூறாமல் வேறு எப்படிக் கூறுவது?
அச்சு ஊடகம் பெரும் வணிக ஊடகமாக வடிவம் பெற்றுள்ளது. இதற்கான கச்சாப்பொருளைத் தொகுப்பு வடிவில்தான் தர முடிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், தாயுமானவர் பாடல்கள் முழுத்திரட்டு, பட்டினத்தார் பாடல் திரட்டு, அருணகிரிநாதர் திரட்டு, குமரகுருபரர் திரட்டு எல்லாம் இப்படித்தான் உருவாகியது. சங்க இலக்கியம், அறநூல்கள், பக்திநூல்கள், அருட்பாதிரட்டு ஆகியவை மேற்கொண்ட விதிமுறைகளோ மரபுகளோ இத்திரட்டுகளில் இல்லை. சந்தையில் விற்கவேண்டும் என்பதே முதன்மையான நோக்கம்.
இவ்வகையான திரட்டுக்களை வ.உ.சி. ப.ஜீவானந்தம், சங்கரதாஸ் சுவாமிகள், புதுமைப்பித்தன் ஆகியோருக்கு நான் செய்துள்ளேன். இதில் இந்த ஆளுமைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கமே இத்தொகுப்புகளின் அரசியல். எனவே பதிப்பு - தொகுப்பு ஆகியவை அச்சு ஊடகத்தில் செயல் படும் முறைமைகளைத் தமிழ்ச்சமூக வரலாற்றோடு இணைப்பதே எங்கள் ஆய்வின் நோக்கம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு குறித்து உங்கள் பேச்சுகளில் அடிக்கடி குறிப்பு வருகிறது. உங்கள் மாணவர்கள் சிலரும் அந்நூற்றாண்டு தொடர்பாக ஆய்வு செய்வதாக அறிகிறேன். அதுபற்றிக் கூறுங்கள்.

இருபதாம் நுற்றாண்டின் இடையில் பிறந்து, அந்த நூற்றாண்டின் இறுதி இருபத்தைந்து ஆண்டுகளின் நேரடி அநுபவத்தோடு வாழ்ந்து வருகிறோம். இருபதாம் நூற்றாண்டின் முன் பகுதிகளை ஊகித்து, வாசித்து அறிந்துகொள்கிறோம். நம்முன் ஆவணங்கள் உள்ளன. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு அத்தன்மை இல்லை. ஆவணங்கள் கிடைப்பது அரிது. அச்சூழல் பற்றிய புரிதலும் இல்லை. மேலும் ஐரோப்பிய நாடுகளில் 16 ஆம் நூற்றாண்டு தொடங்கி, படிப்படியாக வளர்ந்து 19ஆம் நூற்றாண்டில் தான் மறுமலர்ச்சி நிலைபேறு கொண்டது. ஆனால் நமக்கு 19ஆம் நூற்றாண்டில் தான் மறுமலர்ச்சி உருவானது. நாம் இன்று பேசும் நவீன தன்மைகள் அனைத்தும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவானவை. கல்விக்கூடங்கள், நிர்வாக நிறுவனங்கள், அச்சுக்கூடங்கள் அனைத்தும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருப்பெற்றவை. இராமலிங்கர், ஆறுமுக நாவலர், பேரா.சுந்தரம் பிள்ளை, சங்கரதாஸ் சுவாமிகள், வேதநாயகம்பிள்ளை ஆகிய புதிய சிந்தனையாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் உருவாயினர். நவீன தமிழ்ச் சமூகவரலாற்றை அறிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டு நிகழ்வுகள் முக்கிய மானவை. இந்தப் பின்புலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு குறித்து ஆய்வு செய்கிறோம். இன்னும் சில ஆண்டுகளில் எம்துறை மாணவர்கள் இந்த நூற்றாண்டு தொடர்பான விரிவான ஆவணங்களை, தமிழ்ச் சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவருவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.  சி.இராமலிங்கர் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் நாங்கள் தொடங்கிய உரை யாடல் இப்போது பரவலாகியுள்ளது. இதைப்போலப் பல்வேறு ஆளுமைகளை வெளிக்கொணரும் வாய்ப்பு எங்களுக்குண்டு.

பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடர்பாக புதிதாக ஏதேனும் கண்டறிந்துள்ளீர்களா...

புதிதாகக் கண்டறியவில்லை. இதுவரை அறியப் படாத ஒன்றைத் தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்து கிறோம் என்று கூறலாம். 1878-1900 முடிய செயல்பட்ட ஓர் இயக்கம் தொடர்பான விவரணங்கள் கிடைத்துள்ளன. Ôஇந்து சுயாக்கியான சங்கம்Õ என்னும் பெயரில் தொடங்கி Ôசென்னை சுயாக்கியான சங்கம்Õ (விணீபீக்ஷீணீs ஷிமீநீuறீணீக்ஷீ ஷிஷீநீவீமீtஹ்) என்ற அமைப்புச் செயல்பட்டது. இது ஒரு நாத்திக இயக்கம். இந்தியாவில் உருவான முதல் நாத்திக இயக்கம். இவர்கள் நடத்திய இதழ்கள், அமைப்பு செயல்பாடுகள், செயல்பட்டவர்கள் தொடர்பான விவரணங்கள் கிடைத்துள்ளன. இலண்டன் பிரிட்டிஷ் நூலகத்தில் விரிவான தரவுகளைச் சேகரிக்க முடிந்தது. விரைவில் விரிவான ஆய்வாக இவை வெளிவரும். இவ்வகைச் செயல்பாடும் பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடர்பான ஈடுபாட்டிற்குக் காரணம்.

தமிழ்ச்சூழலில் செயல்படும் தமிழியல் தொடர்பான ஆய்வு நிறுவனங்கள் குறித்து உங்கள் எதிர்வினை.

இதற்கு மிகவும் விரிவாகப் பேசவேண்டும். ஒரு பானைச் சோற்றுப் பதமாக, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் பற்றிப் பேசுவோம். பேரா.வ.அய். சுப்பிரமணியம், தென்னிந்தியச் சூழலில் பெரும் ஆய்வு நிறுவனங்களை உருவாக்கிய பேராசிரியர். அவரது திட்டத்தில், தமிழியல் தொடர்பாக சுமார் இருபத்தைந்து துறைகளைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கினார்.  தமிழ், தமிழர், தமிழ் நாடு, உலகத் தமிழர்கள் என்று பரந்துபட்ட ஒரு இனக் குழுவின் சுமார் 5000 ஆண்டுகாலத் தொடர்ச்சியை ஆவணப்படுத்தி, ஆய்வு செய்யும் வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளார்.  அந்த நிறுவனத்தின் வெளியீடுகள், கருத்தரங்குகள், ஆய்வுகள் குறித்து எனது ஆய்வு மாணவி ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்.) ஆய்வைச் செய்து உள்ளார்.  இவர் ஆவணப்படுத்தியுள்ள புள்ளிவிவரங்கள் அடிப்படையில், அந்நிறுவனம் மேலும் மேலும் வளர வில்லை.  இதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும்.  இவ்வகையான நிறுவனங்கள் வளர்ந்தால் தமிழியல் ஆய்வு வேறு பரிமாணத்தில் வளர்ச்சியடையும் என்பது எனது நம்பிக்கை.

தமிழியல் ஆய்வின் பரிமாணத்தில் ‘Diaspora’ எனப்படும் தமிழர் அலைவு உழல்வியல் குறித்துக் கூறமுடியுமா...

தமிழர்கள் தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழ்கிறார்கள்.  மலேயப் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்தியவியல் துறையில், தமிழ் முதன்மையான மொழி. சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழிகளில் ஒன்று.  ஈழத்தில் தமிழின் இடம் குறித்து நமக்குத் தெரியும்.  இப் பின்புலத்தில், ஆசியக் கண்ட அளவில் பெரும்பான்மை யான மக்களின் மொழிகளில் ஒன்றாகத் தமிழ் உள்ளது.  ஈழத்தமிழர் புலம்பெயர்வில் ஐரோப்பிய நாடுகளிலும் தமிழர் பெரும் எண்ணிக்கையில் குடியேறியுள்ளனர்.  உலகத்தில் யூதர்கள் பரவியதைப் போல் தமிழர்கள் பரவியுள்ளார்கள்.  இப்பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் ஆய்வுதான் ஜிணீனீவீறீ ஞிவீணீsஜீஷீக்ஷீணீ. ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களும் ஆசியாவில் வாழும் தமிழர்களும் ஆஸ்திரேலிய - அமெரிக்கத் தமிழர்களும் இணைந்து செயல்படும் ஆய்வாக, வருங்காலத்தில் இத்தன்மை உருப்பெறவேண்டும். உலகத் தமிழ் மாநாடுகள் மூலமாக உருப்பெற்ற ஆய்வுகளின் அடுத்த கட்ட வளர்ச்சிப் பரிமாணமாக இதைப் பார்க்க வேண்டும்.

சமகாலப் படைப்பாளிகள், அவர்களது படைப்பு, கல்வித் திட்டத்தில் சமகாலத்தன்மை ஆகியவை குறித்துச் சொல்லுங்களேன்.

எங்கள் துறையில் சி.சு.செல்லப்பா, லா.ச.ரா., வல்லிக்கண்ணன், அசோகமித்திரன், வண்ணநிலவன், அம்பை உள்ளிட்ட அனைவரும் எங்கள் மாணவர்கள் மத்தியில் உரையாடியுள்ளனர்.  ஏறக்குறைய சமகாலத் தமிழ்க் கவிஞர்கள் அனைவரையும் எங்கள் மாணவர்கள் சந்தித்திருக்கின்றார்கள்.  எல்லோரும் எங்களது நிகழ்வு களில் பங்கேற்றுள்ளார்கள்.  தமிழகத்தின் சிரத்தையான ஆய்வாளர்கள் அனைவரும் எங்கள் துறைக்கு வருகை தந்துள்ளார்கள்.  படிக்கும் ஆக்கத்தின் படைப்பாளியைச் சந்தித்து உரையாடுவதன் மூலம், மாணவர்கள் பெறும் மன எழுச்சி முக்கியமானது.  இதனை நடைமுறைப்படுத்தி யுள்ளோம்.  முனைவர் மற்றும் ஆய்வியல் நிறைஞர் ஆய்வு மாணவர்கள் கருத்தரங்கம் நடத்தி, வெளிக்கொண்டு வந்திருக்கும் எட்டுத் தொகுப்புகளில் மேற்குறித்த தன்மைகளின் விரிவான பதிவை எங்கள் மாணவர்கள் செய்துள்ளனர்.

உங்கள் பாடத்திட்டத்தில் என்னென்ன துறைகளை இணைத்துள்ளீர்கள்.

தமிழ் இலக்கணம், இலக்கியம் என்பது அடிப்படை.  இருபது தாளில் 12 தாள்கள் இவை.  எஞ்சியுள்ள எட்டு தாள்களில் ஊடகம், அரங்கம், தொல்பொருள், சுவடி, நாட்டார் வழக்காறுகள், எனப் பலதுறைகளையும் செயல்முறைப் பாடமாக வடிவமைத்துள்ளோம்.  அரங்கப் பயிற்சி எங்கள் மாணவர்களுக்குக் கிடைக்கிறது.  நவீன அரங்கம் குறித்த புரிதல் எங்கள் மாணவர்களுக்கு எளிதாகக் கிடைக்கிறது.  சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை மாணவர்களைப் பெரும் பான்மையாகக் கொண்ட ‘பல்கலை அரங்கம்’ என்ற நாடக அமைப்பை நடத்தினோம்.  ‘கண்களுக்கு அப்பால்’, ‘ஒரு பயணத்தின் கதை’, ‘ஏகலைவன்’, ‘தீனிப்போர்’ ஆகிய நாடகங்களை நடத்தினோம்.  பல்கலை அரங்கத்தில் செயல்பட்ட, மாணவர்களின் உடல்மொழி, சென்னையில் செயல்பட்ட அரங்க வியலாளர்களின் உடல்மொழியிலிருந்து வேறுபட்டது. இளைய. பத்மநாதனின் பயிற்சியால், வீர்யமான நாடக மொழியை இக்குழு உள்வாங்கியது.  ‘ஒரு பயணத்தின் கதை’, ‘தீனிப்போர்’ ஆகிய நாடகங்கள், தமிழ் நாடக வரலாற்றில் மறுதலிக்க இயலாத படைப்புகள்.  ஆனால் அதைத் தொடரும் வாய்ப்பு பின்னர் இல்லாமல் போனது. அது தொடர்பாக ‘வல்லினம்’ இதழ்ப் பேட்டியில் விரிவாகப் பதிவு செய்துள்ளேன்.  மீண்டும் பேசப் பிடிக்கவில்லை.

சங்க இலக்கிய ஆய்வுகளில் உங்கள் பங்களிப்பு குறித்துச் சொல்லுங்களேன்.

செவ்விலக்கியங்கள் நமது மொழியின் அரிய சொத்து.  அண்மைக் காலங்களில், செவ்விலக்கியங்கள் குறித்த விரிவான அறிமுகம் மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனம் மூலம் முன்னெடுக்கப்பட்டது. எங்கள் துறை மாணவர்களும் இத்துறையில் ஆய்வு செய்து வருகின்றனர்.  சங்க இலக்கியப் பிரதிகளின் கால முறை அறிதல் குறித்து, பேரா.ச.வையாபுரிப்பிள்ளை, வ.அய்.சுப்பிரமணியம் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். முன்னவர் இலக்கண அமைப்புகள், சொல்லாட்சி மற்றும் பொருளாட்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்துள்ளார்.  மொழியியல் கோட்பாடுகள் சார்ந்து வ.அய்.சு. மிக விரிவாக ஆராய்ந்து சங்கஇலக்கியப் பிரதிகளின் கால முறையைப் பதிவுசெய்துள்ளார்.  இம்மரபின் தொடர்ச்சியாக, நம்பிக்கைகள், சடங்குகள் ஆகியவைகளை அடிப்படை யாகக் கொண்டு, மானிடவியல் பின்புலத்தில் சங்கப் பிரதிகளின் காலமுறை குறித்து ஆய்வு ஒன்றை நான் செய்துள்ளேன்.  இவ்வாய்வு மேற்குறித்தவர்களின் முடிவு களோடு ஒத்துப் போகிறது.  இக்கட்டுரை ஆங்கிலத்தில், செக்கஸ்லோவேகியாவில் உள்ள பிராக் பல்கலைக்கழக ஆய்விதழில் வெளிவந்துள்ளது.
சங்க இலக்கியத் தொகுப்பில் காணப்படும் பல்வேறு உள் முரண்பாடுகள்; சங்க இலக்கியப் பிரதிகளுக்குக் கிடைக்கும் அனைத்துச் சுவடிகளையும் அடிப்படையாகக்கொண்டு பதிப்பிக்கும் மூலபாடப் பதிப்புமுறை, அகப் பாடல்களை, அகஇலக்கண மரபில் வைத்து மதிப்பீடு செய்யாமல், மனித சமூகத்தின் அகமரபு என்ற பொதுப்புத்தியில் எப்படிப் புரிந்து கொள்வது; மானிடவியல் கண்ணோட்டத்தில் சங்க இலக்கியம், தொல்லியல் நோக்கில் சங்க இலக்கியம் ஆகிய பிற ஆய்வுகளை எங்கள் மாணவர்கள் செய்து வருகிறார்கள்.  எங்கள் துறையில் சங்க இலக்கிய உரைகளை ஆய்வு செய்த அ. சதீஷ் நூலை அடை யாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
தொல்காப்பியம் போன்ற இலக்கணங்கள் கூறும் வரையறைகள், குறிப்பாக வாய்பாடுகள் சார்ந்த ஆய்வைத் தவிர்த்து, மேற்குறித்த பின்புலத்தில் சங்க இலக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.  நவீன புரிதலுக்கு சங்க இலக்கியப்பிரதிகள் எவ்வகையில் தேவைப்படுகின்றன என்ற கண்ணோட்டத்தில் எங்கள் ஆய்வுகள் உள்ளன.
சங்க இலக்கியத்தில் பயிற்சி பெற்றுள்ள எமது ஆய்வாளர்களைக்கொண்டு, குறைந்தது ஐந்து ஆண்டுக் கால அவகாசத்தில், புதிய பதிப்பு ஒன்றை எங்களால் உருவாக்க முடியும்.  மூலபாடம், பாடவேறுபாடுகள், மொழிபெயர்ப்பு, சுருக்கஉரை, வரலாறு, தொல்லியல், மானிடவியல், இலக்கணம் மற்றும் மொழியியல் ஆகிய அனைத்தும் அடங்கிய சங்கஇலக்கியப் பதிப்பை எம்மால் செய்ய முடியும்.  என்.சி.பி.எச். நிறுவன உதவியால் எதிர் காலத்தில் இத்திட்டத்தை நிறைவேற்றமுடியும் என்று  நம்புகிறேன்.  பேரா.ச.வையாபுரிப்பிள்ளை உருவாக்கிய அகராதி மரபு சார்ந்த சங்கப் பதிப்பை ஒத்தது எங்களது பணி.  அவரது காலத்தின் தனித்த செயல்பாடு அது. எங்கள் காலத்தின் அனைத்து வளங்களையும் உள்வாங்கி எங்களால் செயல்பட முடியும்.  அப்பதிப்பு சங்க இலக்கியப் பிரதிகளுக்காக முழுமையாக அமையும் என்ற நம்பிக்கையுண்டு.

நீங்கள் தொடர்பு கொண்டுள்ள இதழ்கள் குறித்து...

இருபத்தைந்து நாடுகளில் வாழும் தமிழர்கள், சுவிட்சர்லாந்து ஓசோன் நகரில் 2001 இல் கூடினர்.  ஈழம், தமிழகம், ஐரோப்பிய நாடுகள் என அனைத்துப் பகுதியில் வாழும் தமிழர்கள் தங்களுள் நடத்தும் கலை நிகழ்வுகளைக் குறிப்பாக, அரங்க நிகழ்வுகளை ஆவணப் படுத்தும் இதழ் ஒன்றைக் கொண்டுவரத் திட்டமிட்டனர்.  சிறப்பாசிரியராக நான் செயல்பட்டு ‘கட்டியம்’ என்னும் Ôஉலகத் தமிழர் அரங்க ஆய்விதழைÕக் கொண்டு வந்தோம். ஏழு இதழ்கள், நான்கு ஆண்டுகளில் வெளிவந்தது.  அதனைத் தொடர இயலவில்லை.  அவ்விதழ் அமைப்பு, உள்ளடக்கம் ஆகியவை இன்றும் நினைவை விட்டு அகலாத பதிவாக உள்ளது.  அவ்விதழ்களில் அரங்கவியலாளர்கள் பற்றிய நீண்ட பேட்டிகளை வெளியிட்டோம்.
இப்போது ‘மாற்றுவெளி’ என்ற ஆய்விதழை நடத்தி வருகிறோம்.  இதுவரை ஆறு இதழ்கள் வெளிவந்துள்ளன. பல்கலைக்கழகங்களில் சிரத்தையான ஆய்விதழ்கள் வரவேண்டும்.  அது தமிழ்ச் சூழலில் சிறப்பாக நடை பெறவில்லை.  எங்களது ஆய்வு மாணவர்கள் உதவி யோடு இவ்விதழ் வெளிவருகிறது.  கால்டுவெல், இந்தியப் பொருளாதாரம், கல்வி, தமிழ்நாவல்கள், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம், மாற்றுப் பாலினம் ஆகிய பொருண்மைகளில் இதுவரை இதழ்களைக் கொண்டு வந்துள்ளோம்.  சிரத்தையான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட முயன்றுள்ளோம். இவ்விதம் ஆய்வு இதழ்களில் செயல்படும் அனுபவம் செழுமையானது.  கடுமையான உழைப்பையும் நேரத்தையும் கோரி நிற்பது.  அதில் திருப்தியாகச் செயல்படுகிறோம்.  இந்த மரபை எமது மாணவர்கள் மேலும் முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

மாற்று மற்றும் பரிசல் வெளியீட்டு நிறுவனத்தோடு உங்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது.

இதற்குப் பரிசல் சிவ. செந்தில்நாதன் தான் சரியான விடையளிக்க முடியும்.  என்னைப் பொறுத்தவரை ஒருங்கிணைப்பாளராக இருந்து ‘கங்கு வரிசை’ என்னும் பெயரில் 10 குறுநூல்களைக் கொண்டு வந்தோம்.  தமிழ்ச் சமூகத்தின் நிகழ்வுகளை அரசியல் கண்ணோட்டத்தில்/ தத்துவக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள உதவும் சிறு முயற்சியாக அவை அமைந்துள்ளன.  இதனைப் போலவே பொதுப் பதிப்பா சிரியராக இருந்து இருபது தொகுதிளைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம்.  அதில் ஏழு தொகுதிகள் வெளிவந்துள்ளன.  கூத்து, சுவரோவியம், அரங்க ஒலி, பக்தி ஆகியவை குறித்தும் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவை குறித்தும் இத்தொகுப்புகளைக் கொண்டுவந்துள்ளோம். வருங்காலத்தில் என்.சி.பி.எச். நிறுவனத்தோடு இணைந்து இவ்வகைப் பணிகளைச் செய்ய விரும்பு கிறோம்.  அதற்கு இந்த நிறுவனம் இட மளிக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் குறித்து உங்கள் மனப்பதிவைப் பகிர்ந்து கொள்ள முடியுமா.

தமிழில் செயல்படும் புத்தக வெளியீட்டு நிறுவனங்களில் மிகப் பெரிய பொது நிறுவனம் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்.  வணிகமாகச் செயல்படும் புத்தக வெளியீட்டுச் சூழலில், வேறுபட்டுச் செயல்படுகிறது இந்நிறுவனம்.  தனியொருவரின் சொத்தாக இந்நிறுவனம் இல்லை.  1950களிலிருந்து தமிழுக்குப் பல்துறை சார்ந்த நூல்களைக் கொண்டுவந்தது இந்த நிறுவனமே.  இந்த நிறுவன வெளியீடுகளை வாசித்தே என்னைப் போன்றவர்கள் வளர்ந் தோம்.  இந்த நிறுவனத்தை வளர்த்தெடுக்கும் கடமை என்னைப் போன்றவர்களுக்கு இருப் பதாகக் கருதுகிறேன்.  7500 பக்கங்களில் தோழர் ஜீவாவின் ஆங்கங்களைத் தொகுத்து, பதிப்பித்து இந்த நிறுவனத்திற்குக் கொடுத்தேன்.  பதிப்பு உரிமையையும் நிறுவனமே வைத்துக்கொள்ள அனுமதித்தேன்.  இந்நிறுவனம், இப்பணி மூலம் என்னை அங்கீகரித்துள்ளது.  இவ் வகையான வெளியீட்டுப் பணிகளைச் செய்யும் நிறுவனங்களோடு இணைந்து செயல்படுவது அவசியமெனக் கருதுகிறேன்.

நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் இதழ் பற்றித் தங்களின் மதிப்பீடு.

இந்த இதழ் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தொடர்ச்சியாக வாசிக்கும் வாசகனில் நானும் ஒருவன்.  இந்த இதழ் தொடர்பாக மறைந்த தோழர் ஆர்.பி.எஸ். அவர்களிடம் நிறைய விவாதித்துள்ளேன்.  இதழ் வடிவமைப்பு, உள்ளடக்கம் குறித்து அவரிடம் பேசி யுள்ளேன். இப்போது பொறுப்பாசிரியராகச் செயல்படும் கவிஞர் சரவணன் அவர் களிடமும் தொடர்ந்து இவ்விதழ் குறித்துப் பல்வேறு ஆலோசனைகளைக் கூறி வந்துள்ளேன்.  ‘தமிழ் அச்சுப் பண்பாடு’ என்னும் ஆய்வுக் கட்டுரைத்தொடரை எழுத இந்த இதழின் ஆசிரியர் குழு எனக்கு வாய்ப்பு தந்தது.  பத்து இதழில் எழுதினேன்.  அதனை விரித்து எழுதி நூலாக வெளியிடும் தருணத் திற்காகக் காத்திருக்கிறேன்.  இவ்வகையில் இவ்விதழ் தமிழ்ச் சூழலில் காத்திரமாகச் செயல்படும் இதழ்களில் ஒன்றாக வெளி வந்துகொண்டிருக்கிறது.

Friday, June 10, 2011

இந்திய மெய்யியலின் அறுபடாத தொடர்வளர்ச்சியைத் தமிழகத்தில் மட்டுமே காணமுடியும்

  


பொ. வேல்சாமி 

உரையாடியவர்: க.காமராசன்
பொ.வேல்சாமி (1951) தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பொம்மையா நாயக்கர்பாப்பம்மாள் ஆகியோர் இவரது பெற்றோர்.  தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர்.  முட்டை வணிகம் செய்து வருகிறார்.  தினமணிகாலச்சுவடுதீராநதிஉங்கள் நூலகம்,கவிதாசரண்புத்தகம் பேசுது உள்ளிட்ட பல இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.  1990களில் தமிழ்ச் சூழலில் மிகப் பெரும் அதிர்வை ஏற்படுத்தியநிறப்பிரிகை’ இதழின் ஆசிரியர் குழுவில் ரவிக்குமார்அ.மார்க்ஸ் ஆகியோருடன் பணிபுரிந்தவர்.  தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர்.  வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம்.  இவர் எழுதிய நூல்கள் 1. பொற்கலங்களும் இருண்ட காலங்களும், 2. கோவில் நிலம் சாதி, 3. பொய்யும் வழுவும்.  இந்த நேர்காணலுக்குத் தேவையான நிழற்படங்களை எடுத்துதவியவர் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் ஒருங்கிணைந்த முதுநிலைக் காட்சித் தொடர்பியல் பயிலும் மாணவர் 
சே. தனபால்.
தமிழக மெய்யியல் வரலாறு பற்றிப் பேசுவோம். Philosophy என்னும் புலமைத் துறைக்காகத் தமிழில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் யாவை?இந்தப் புலமைத்துறை தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு நோக்கப் பட்டிருக்கின்றது?
மெய்ப்பொருள்மெய்யுணர்தல் போன்ற சொற்களைத் திருக்குறளில் காண்கிறோம்.  வாதம்சமயம் போன்ற சொற்களை மணிமேகலையில் காண்கிறோம்.  திருக்குறளின் மெய்யுணர்தல் அதி காரத்திற்கு விளக்கம் சொல்லும்போது பரிமேலழகர் மெய்யுணர்தலை வடமொழி நூலோர் தத்துவ ஞானம் என்பர்” என்று கூறுகின்றார். இங்குதான் தத்துவ ஞானம்’  என்னும் சொல் முதன் முதலாக வருகின்றது.  தத்வ ஞானி’ என்ற சொல் வில்லி பாரதத்தில் வருகின்றது.
Philosoby என்பதற்குச் சமமான சொல்லாக தத்துவ ஞானம்’ என்ற சொல்லைக் கொள்கிறோம். இது நாம் இத்துறையைப் புரிந்துகொள்வதில் சில சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. ஓர் எடுத்துக் காட்டைப் பார்ப்போம்.   Atom என்பதை அணுஎன்று நவீன காலத்தில் மொழிபெயர்க்கிறோம்.  இந்த அணு என்ற சொல் தமிழிலக்கியத்தில் எங்கெங்கு வருகின்றதோ அங்கங்கெல்லாம் Atom என்றே பொருள் கொள்கிறோம். Atom என்ற சொல்லுக்கு அறிவியல் துறையில் உள்ள பொருளில் அணு என்ற சொல் தமிழிலக்கியத்தில் பயன்படுத்தப் படவில்லை.அணு’ என்பது மிகச் சிறிய துகள் என்ற பொருளிலேயே தமிழ் இலக்கியத்தில் பயன் படுத்தப்பட்டிருக்கின்றது. இதைப் போலத்தான் தத்துவ ஞானமும்’ ‘Philosophy’.  ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக்குப் பிறகு Philosophy என்ற புலமைத் துறை பெற்ற இலக்கணங்களை எல்லாம் இங்குத் தத்துவ ஞானம்’  என்னும் புலமைத்துறை பெற வில்லை. Philosophy என்பதைத் தத்துவ ஞானம்’  என்று மொழிபெயர்ப்பது இத்துறையைச் சரியாக விளங்கிக் கொள்வதற்குத் தடையாய் மாறிவிடுகின்றது.
தமிழகத்தில் சுமார் இரண்டாயிரம் அல்லது ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் உலகத்தைப் பற்றிவாழ்க்கைப் பிரச்சினைகள் பற்றிஇந்தப் பிரச் சினைகளில் சிக்கிக்கொண்டு மனிதன் படுகின்ற பாடுகள் பற்றி எல்லாம் சிந்தித்திருக்கின்றனர்;  விவாதித்து இருக்கின்றனர். வாழ்க்கைப் பிரச் சினைகள்பாடுகள் ஆகியவற்றிலிருந்து விடுதலை அடைவது வாழும்போது சாத்தியமா அல்லது இறந்த பிறகு சாத்தியமா?  என்று கேட்டால் இறந்த பிறகுதான் கிடைக்கும் என்கின்றனர். அதனை முக்தி என்று சொல்கின்றனர். சில பேர் வாழும் போதே முக்தி அடையலாம் என்று கூறுவர்.
ஒருவன் உயிரோடு இருக்கும்போது முக்தியடைதல் என்பது தன் சக மனிதர்களிடமிருந்து அந்நியப்பட்டிருத்தல்அதாவது அவனளவிலே முக்தியடைதல் என்பது தான் இருக்கிறது. விடுதலை என்பதை மனிதகுல விடுதலையாகப் பார்க்காமல் தனிமனிதனுக்கான விடுதலையாக இங்கே பார்த்திருக்கின்றனர். மனித குல விடுதலை என்பதற்கு மனித நடவடிக்கைகள் அனைத்தையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்வெறும் மனம் அல்லது சிந்தனை சார்ந்த விடுதலை என்பது மட்டுமாகப் பார்க்க முடியாது.  மனிதகுல விடுதலை என்பது மொத்த மனித நடவடிக் கையையும் மாற்றியமைப்பது,விமர்சிப்பதுநடை முறையிலிருக்கின்ற கூறுகளில் மனிதனுக்கு எதிரான கூறுகளை அகற்றிவிட்டுமனித வாழ்வுக்கு வளம் சேர்க்கிற கூறுகளை இணைப்பது. இவையெல்லாம் சாதாரணமாக நடக்காது. அதற்குப் பெயர்தான் புரட்சி. இந்த மாதிரியான சிந்தனை மரபுகள் இங்குத் தோன்றவில்லை. அப்படி வரவேண்டும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.  ஏனென்றால் இங்கு ஒரு தனித்துவமான நிலக்கிழமை முறை இருந்தது.
இந்தத் தனித்துவமானஐரோப்பிய மாதிரியில் இருந்து விலகின நிலக்கிழமை முறையைத்தான் மார்க்ஸ் ஆசிய பாணி உற்பத்தி முறை என்று சொல்லி விளக்குகிறார்.  இங்கிருந்த நிலக்கிழமை உற்பத்தி முறையில் நிலம் அடிப்படை வாழ்வாதாரமாக இருந்தாலும்நில உரிமை ஐரோப்பாவில் இருந்த மாதிரி இங்கு இல்லை.  அப்போது அங்கிருந்த மாதிரியான உற்பத்தி முறை இங்கு இல்லை என்றாகிறது.  இங்கு இருந்த உற்பத்தி முறை மனிதர்களைத் தொகுதிதொகுதியாகப் பிரித்து வைத்திருந்தது.  இதுதான் சாதி. ஒரு சாதிக்கான உணவு இன்னொரு சாதிக்குக் கிடையாது. ஒரு சாதிக்கான உடை இன்னொரு சாதிக்குக் கிடையாது.  ஒரு சாதிக்கான சிந்தனையும் இன்னொரு சாதிக் கானதாக இருக்க முடியாது.  இப்படி இருக்கும் போது எப்படி ஒரு சிந்தனைசமூகம் தழுவியதாக மாற முடியும்சமூக விடுதலையைப் பேச முடியும்?
இங்குத் தத்துவ ஞானம்’ என்று பேசப் பட்டவை எல்லாம் இறையியல் சார்ந்தவையாக இருந்தன;  இறையியலுக்குக் கீழ்ப்பட்டவையாக இருந்தன. அதனால்தான் ஐரோப்பிய அறிஞர்கள் இந்தியச் சிந்தனை மரபை இறையியல் சார்ந்தது என்று சொன்னார்கள்.  கிறித்துவ மதம் சார்ந்த சிந்தனைகளை இறையியல் என்று சொல்வது போல இங்கிருந்த சிந்தனை முறைகள் இருந்தன.  அப்படியென்றால் மதம் எப்படி இருந்தது.  மேலிருந்த இரண்டு,மூன்று சாதிகளைத் தாண்டி இங்கிருந்த மதங்கள் பொதுமக்கள் மதமாக இல்லை.  அது சைவமாக இருந்தாலும் சரிவைணவமாக இருந் தாலும் சரி,எந்த மதமும் அனைத்துச் சாதி களையும்மக்களையும் உள்ளடக்கிய மதமாக இல்லை.  பார்ப்பனர்வேளாளர்முதலியார் மதமாகத் தாம் அவை இருந்தன. மக்கள் மதமாக அவை இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் எவையும் இல்லை.  இதனால்தான் எந்தவொரு சிந்தனைமுறையும் சமூகம் தழுவியதாக நிலவ இங்கு வாய்ப்பே இல்லை.  இன்றுவரை இங்கு வாழ்கின்ற மனிதர்களை ஒருங்கிணைப்பதற்கான பொதுத்தன்மை என்ன இருக்கின்றதுதமிழ் மொழியைப் பேசிக்கொண்டிருக்கின்றனர் என்பதைத் தவிர ஒன்றுமில்லை.
இப்படி ஒருங்கிணைக்கப்படாதகூறுகூறாகப் பிரித்திருக்கின்ற சமூகங்களாக இருப்பவை பழங் குடிச் சமூகங்கள்.  அவை இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் ஒருங்கிணைந்த சமூகமாகத் திரள முடியாமல் இயற்கைக்குக் கீழ்ப்பட்டுக் கிடக்கும்.  இங்கு ஒரு சமூகத்திற்குள் நாம் சாதி களாகப் பிளவுபட்டுக் கிடக்கிறோம்.  அதனால் ஒருங்கிணைந்த பண்பாடு இல்லை. வெவ்வேறான திருமணமுறைகள்பழக்கவழக்கங்கள்சடங்குகள் இருக்கின்றன. இவற்றை ஒருங்கிணைப்பது மதம் தான்.  கிறித்துவம்இசுலாம் எல்லாம் அப்படிச் செயல்பட்டன. இங்கிருந்த மதங்கள் அப்படிச் செயல்படவில்லை.  எனவே மதங்களும்மதரீதியான சிந்தனைகளும்,உலகம்மனிதன்அவன் படுகின்ற பாடுகள் பற்றிய சிந்தனைகளும் குறிப்பிட்ட சாதி களுக்கே உரியவையாக இருந்தன. தமிழ் மக்கள் அனைவருக்குமான ஒரு சிந்தனை முறை இங்குத் தோன்றவே இல்லை.
இதனை வேறு மாதிரியாகவும் சொல்ல முடியும்.  உபரி உற்பத்தி முறையை அனுபவித்துக் கொண்டிருந்த சாதிகளுக்கு ஓய்வு நேரத்தில் நாட்டியம்,நாடகம்இசைஇலக்கியம் போன்ற இன்பம் தரும் பொழுதுபோக்குகள் போன்றே தத்துவ ஞானமும்’ இங்கு ஒரு பொழுது போக்காகவே இருந்தது. ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலையைப் பற்றிச் சிந்திக்கும் தத்துவ ஞானம்’ இங்குத் தோன்றவே இல்லை.  செயற்படவும் இல்லை. அப்படியானதொரு தொடக்கத்தைப் பெரியாரிடம் தான் காண்கிறோம்.
இந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்னதமிழர்களின் பங்களிப்பு என்ன?
இந்த விஷயத்தைப் பேசும் முன்னர் இந்திய மெய்யியல் வரலாறு எழுதப்பட்ட வரலாற்றைப் புரிந்துகொள்வது அவசியம்.  அப்போதுதான் தமிழில் உள்ள விவரங்கள் சரியாக ஏன் கவனம் பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.  இந்திய மெய்யியல் வரலாறு எழுதப்படுவதற்கான முயற்சிகள் 18, 19ஆம் நூற்றாண்டுகளில் தொடங்கப் பட்டன.  இம்முயற்சிகளை இந்தியர்கள் தொடங்க வில்லை. 
இந்தியத் துணைக்கண்டத்தை அடிமைப் படுத்திய ஆங்கிலேயர்களுக்கு இங்கு எழுந்த குற்ற வியல்உரிமையியல் தொடர்பான ஆட்சி அலுவல் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு ஒருங்கிணைந்த சட்ட முறை தேவைப்பட்டது. ஒருங்கிணைந்த சட்ட முறைக்கான அடிப்படை ஏதாவது இருக்கின்றதா,பிளவுபட்டுக் கிடக்கின்ற சமூகத்திற்கு ஏதாவது ஒத்த தன்மை இருக்கின்றதா என்று தேடுகின்றார்கள்.  அப்படிப் பார்க்கும்போது காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி வரை மனுஸ்மிருதி பொதுவாக ஏற்கப்படுவதைக் கண்டுபிடிக்கிறார்கள். 
மனுஸ்மிருதியைக் கண்டு பிடித்துப் பதிப்பித்து மொழிபெயர்க்கிறார்கள். மனுஸ்மிருதியின் அடிப்படையான நால்வருணக் கோட்பாட்டிற்கு எது நியாயம் வழங்குகிறது என்று பார்க்கும்போது வேதநெறி சிந்தனைகளைக் கண்டடைகிறார்கள்.  இதற்குப் பிறகு நாற்பதுஐம்பது ஆண்டுகளில் வேதங்கள்உபநிடதங்கள் உள்ளிட்ட முக்கியமான நூல்களை எல்லாம் பதிப்பிக்கின்றார்கள். பதிப்பிக்கும்போதே மொழி பெயர்த்துக் கொள்கின்றார்கள். இதற்காக 1784-இல் ஆசியவியல் கழகத்தை நிறுவுகிறார்கள்.
அப்போதே ஒன்பது இலட்சம் ரூபாய் ஒதுக்குகிறார்கள்.  இந்தக் கழகத்திற்கு மார்க்ஸ் முல்லரை நியமிக்கிறார்கள்.  மார்க்ஸ் முல்லர் கீழைதேயவியல் புனித நூல்கள் என்ற நூல் தொகுதிகளில் வேதங்கள்உபநிடதங்கள் உள்ளிட்டவற்றை ஒழுங்குபடுத்தி மொழிபெயர்த்து வெளியிடுகின்றார். வேதங்களுக்கான வேத-பாஷ் யங்களும் வெளியிடப்படுகின்றன. இவற்றையெல்லாம் தொகுத்துக் கொண்டுதான் மைனி என்பவர் இந்துச் சட்டத் தொகுப்பை உருவாக்குகிறார். இந்தச் சட்டத் தொகுப்பு இன்றுவரைக்கும் நடைமுறையில் இருக்கின்றது.  இந்தச் சட்டத் தொகுப்பின் பின் புலத்தில்தான் இந்திய வரலாறுஇலக்கியம்சிந்தனைபண்பாடு ஆகியவை பேசப்பட்டன.  இவை எல்லாம் ஆட்சியாளர்களாகிய ஆங்கி லேயர்கள் தங்கள் நலன்களுக்காகச் செய்தவை.
1930-களில் இந்திய மெய்யியல் வரலாற்றை எழுதும் போது எஸ். இராதாகிருஷ்ணன் இந்திய மெய்யியல் வரலாறுபற்றி இந்தியர்கள் எழுதிய நூல்கள் எதுவும் இல்லை எனக் குறைப்பட்டுக் கொள்ளுமளவுக்கு அப்போது நிலைமை இருந்தது.   1950-கள் வரைக்குமேகூட இந்திய மெய்யியல் வரலாற்றைப் பற்றிய இந்தியர்கள் கருத்து எடுபட வில்லை என்பது முக்கியமானது.  இந்தக் குறையைப் போக்கும் பொருட்டு இராதாகிருஷ்ணன் தலை மையில் இந்திய அரசு ஒரு குழுவை அமைத்துக் கீழைமேலை நாடுகளின் மெய்ப்பொருளியல் வரலாறு என்ற நூலை வெளியிடுகிறார்கள். இந்தப் புத்தகத்தைத் தமிழில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கின்றது. இந்திய மெய்யியலுக்கு ஐரோப்பியர்கள் முக்கியத்துவம் தரவில்லை என்பது பற்றியும்வளமான இந்திய மெய்யியல் மரபு பற்றிப் பேச மறுப்பது பற்றியும் அப்போதிருந்த அமைச்சர் அபுல் கலாம் ஆசாத் கேள்விகளை எழுப்புகிறார். அவர் மெய்யியல் வரலாற்றை இந்தியாவிலிருந்து எழுத வேண்டும் என்று கூறினார்.
இந்த நேரத்தில் நம்மவர்கள் இந்தியாவில் இருந்து தொடங்குவது நல்ல விசயம்தமிழ் நாட்டிலிருந்து தொடங்குவதும் அவசியம் என்று சொல்லி இருக்க வேண்டும்.  அப்போது இங்குத் தமிழ் மேன்மைதனித்தமிழ் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தாலும் வரலாறுபண்பாடு ஆகியவை பற்றியெல்லாம் உருப்படியான பணிகள் நடக்க வில்லை.  இந்திய மெய்யியல் வரலாற்றைத் தமிழில் இருந்து தொடங்க வேண்டும் என்று சொல்லு வதற்கு ஆளுமையான ஆட்கள் இல்லை. இந்திய மெய்யியல் வரலாற்றைத் தமிழில் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றனவா என்று பார்த்தோமானால் நிறைய இருக்கின்றன.  அவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டனவா?  பகுத்தாயப்பட்டனவா?  என்று கேட்டால் இல்லை.  1950-கள் வரைக்குமே இந்த ஆதாரங்கள் பெரிய அளவில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.  இதைக் கவனத்தில் கொண்டவர் மயிலை சீனி. வேங்கட சாமிதான்.  அவர்தான் பௌத்தமும் தமிழும்சைனமும் தமிழும் என்றெல்லாம் நூல்களை எழுதினார்.  இன்னொரு புறம்திருக்குறள் சைன நூல் என்பதை வலியுறுத்துவதற்காக சைனத் தமிழறிஞர்கள் சைனத் தத்துவங்களைத் தமிழில் தொகுக்கிறார்கள்.  இந்த மாதிரியான வேலை களுக்கெல்லாம் அடிப்படையாகவும்தூண்டு தலாகவும் உ.வே.சாமிநாதய்யர் இருக்கின்றார்.  அவர் சீவகசிந்தாமணிப் பதிப்பிலும்மணிமேகலைப் பதிப்பிலும் சைனபௌத்த சிந்தனை விவரங்களைத் தொகுத்தளிக்கின்றார். பௌத்தம் பற்றி உ.வே.சா. எழுதிய மணிமேகலை முன்னுரை மிக விரிவானது;  முக்கியமானது. இந்தப் பணிகளை ஓரளவு முன் னெடுத்துச் சென்றவர் அயோத்திதாசப் பண்டிதர்.  ஆனால் போதிய அளவு அவர் கவனம் செலுத்த வில்லை.
இந்தப் பணிகள் தொடர்ந்து மேலெடுத்துச் செல்லப்படவில்லை.  தமிழ்நாட்டில் இந்திய மெய்யியல் வரலாறு பற்றி ஏராளமான குறிப்புகள் இருந்தாலும்அவற்றை இந்திய மெய்யியல் வரலாற்று எழுத்துகளுடன் இணைப்பதற்கு வழிவகைகளை நாம் உண்டாக்கவில்லை.  வடக்கே எழுதியவர்கள் தமிழ் விவரங்களைத் தெரிந்துகொள்ளவில்லை.  ஆனால் தமிழ் மூலாதாரமான சான்றுகளைக் கொண்டுள்ள மொழி என்பது சிலருக்குத் தெரிய வந்தது.  ஏ.எல். பாஷம் அஜிவகர்களைப் பற்றி எழுதும் போது அதற்குத் தேவையான அடிப்படைச் சான்றுகளை எல்லாம் தமிழிலிருந்தே எடுத்துக் கொண்டார்.  அந்த நூல் கூட இன்னும் தமிழில் பெயர்க்கப்படவில்லை.  அஜிவகர்கள் இந்திய மெய்யியல் பிரிவுகளில் முக்கியமானவர்கள்.  அவர் களைப் பற்றி வடமொழியில் அதிக விவரமேதும் இல்லை;  தமிழில்தான் இருக்கின்றது என்கிறார் ஏ.எல். பாஷம்.  தமிழில் இந்திய மெய்யியல் பற்றி விவரங்கள் அதிகமாகவும்தொடர்ச்சியாகவும் காணப்பட்டாலும்கூட அவை சரியாக ஆராயப் படவில்லை;எடுத்துக்கூறப்படவில்லை.
தமிழகத்தைப் பொறுத்த அளவில் மெய்யியல் ஆகட்டும்இறையியல் ஆகட்டும்அவை சார்ந்த குறிப்புகள் மணிமேகலையில் தெளிவாக உள்ளனஅதற்கு முன் ஓரளவு சிலப்பதிகாரத்திலும் உள்ளன.  அவை திருக்குறளிலும் விவாதிக்கப்பட்டுள்ளன.  இந்த நூல்களை எவ்வளவுதான் பின்தள்ளினாலும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு மேல் பின்தள்ளி வர முடியாது.  இந்த நூல்களில் சொல்லப்படும் சிந்தனை முறையைக் கொண்டு மட்டும் நான் இதைக் கூறவில்லை. அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் வாழ்க்கை முறை,நகர அமைப்புவாணிக முறை ஆகியவற்றையெல்லாம் பார்த்தால் அவற்றின் காலம் பற்றித் தெளிவு கிடைக்கும்.
இந்த நூல்களின் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்புதான் என்பதின் முக்கியத் துவம் என்னவென்றால்இந்திய மெய்யியல் பற்றிய எழுத்துப்பதிவு விவரங்களும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்துதான் கிடைக்கிறது என்பது ஆகும். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பு என்ன இருந்தது.  வேதங்களும்,உபநிடதங்களும் இருந்தன.  வேதங்கள்உபநிடதங்கள் ஆகியவற்றின் காலம் பற்றிப் பெரிய பிரச்சினை இருக்கின்றது.  அவற்றின் காலத்தை முடிவு செய்வதில் ஒவ்வொருவரும் வேறுபடுகின்றனர். 
ஒருவர் கி.மு. பதினைந்தாம் நூற்றாண்டு என்பார்.  மற்றவர் கி.மு. பத்தாம் நூற்றாண்டு என்பார்.  இன்னொருவர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு என்பார். ஒத்த கருத்து ஏற்படவில்லை.  இன்னொரு பிரச்சினையும் உண்டு.  அவை என்ன எழுத்தில்என்ன மொழியில் பதிவு செய்யப்பட்டுபாதுகாக்கப்பட்டன என்று கேட்டால் தெளிவாகப் பதில் இல்லை.  உபநிடதங்களைப்பற்றிப் புத்தர் பேசியதனால் அவை புத்தர் காலத்திற்கு முந்தி இருந்திருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.  புத்தர் பேச்சுகள்உரைகள் ஆகியவற்றைத் தொகுத்ததே புத்தர் இறந்து முந்நூறு அல்லது ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்புதான்.  புத்தர் வாய்மொழிகள் என்று சொல்லப்படுவதிலேயே நம்பகத்தன்மை உறுதியானதாக இல்லை.  புத்தர் பேச்சுகளை எல்லாம் ஒரு சுருக்கெழுத்தர் பதிவு செய்தார் என்பது போன்ற சான்றுகள் ஏதும் இல்லை.
புத்தர் இறந்த பின்பு நூறாண்டுகள் கழித்தே புத்தர் கொள்கைகளை வரையறுக்கப் பௌத்தத் துறவிகள் சங்கத்தைக் கூட்டினார்கள் என்று தெரிய வருகின்றது.  எப்படிப் பார்த்தாலும் கி.பி.க்குப் பின்புதான் புத்தர் போதனைகள் எழுத்துருவம் பெறுகின்றன.  இந்திய வரலாற்றில் வேதங்கள்உபநிடதங்கள்,புத்தர் போதனைகள் உள்ளிட்ட எவையும் கி.பி.க்குப் பின்புதான் எழுத்தில் பதிவு செய்யப்பட்டன என்பது முக்கியமானது.  இதே காலத்தில் எழுதப்பட்ட தமிழ் நூல்கள் நிறையவே இருக்கின்றன.
இதில் இன்னொரு விஷயமும் உண்டு.  வேதாந்தம் பற்றிய குறிப்புகளை வேதங்கள், உபநிடதங்கள் அடுத்து சங்கரர் காலத்தில்தான் காண முடிகிறது. இடையில் பௌத்த நூல்களில் மறுப்பதற்காக வேதாந்தம் எடுத்துப் பேசப்பட்டு இருக்கின்றது.  வேதநெறிபற்றிச் சங்கரருக்கு முன்பு சங்கரரின் ஆசிரியர்கள் பேசியிருக்கின்றார்கள். வேறு யாரும் பேசியதாகத் தெரியவில்லை.  ஏன் மகாபாரதத்தில் பேசப்படவில்லையா என்றால்,மகாபாரதம் கி.பி. ஒன்பதுபத்தாம் நூற்றாண்டுக்குப் பின்புதான் இறுதியான எழுத்து வடிவம் பெற்றது.  இதற்கான வெளிப்படையான சான்றுகள் மகா பாரதத்திலேயே இருக்கின்றன.  ஆகவே இந்திய மெய்யியலுக்கு இப்போதிருக்கின்ற அமைப்புவடிவம் எல்லாம் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்புதான் கிடைத்திருக்கின்றது.  வடமொழி சான்றுகளில் ஒரு தொடர்ச்சி இல்லை என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது.
தமிழ் மரபு அப்படி இல்லை.  தமிழ் மரபில் வளர்ச்சியின் தொடர்ச்சியைப் பார்க்க முடிகிறது.  சங்க இலக்கியத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்க்கைநெறிச் சிந்தனை இருக்கின்றது.  அடுத்து திருக்குறள்சிலப்பதிகாரம் வருகின்றபோது ஊழ்விதி பற்றிய சிந்தனைகளைப் பார்க்க முடிகின்றது. அதற்கடுத்து மணிமேகலைநீலகேசி ஆகியவற்றில் இந்திய மெய்யியல் மரபு என்று கூறப்படுவதுடன் இணைந்த விவாதப் போக்கு வருகின்றது.  அவை பௌத்தசைன தத்துவத்தை மிக நுணுக்கமாகவிரிவாக வாத முறையில் எடுத்துக் கூறுகின்றன. 
பௌத்தசைன தத்துவங்கள் பேசும் இலக்கியங் களைப் படைப்பது,இலக்கியங்களைப் பயில் வதற்கான இலக்கணங்களைப் படைப்பது என்பது போன்ற தொடர் நடவடிக்கைகளைக் காண் கிறோம்.  பெரும்பாலான முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் நூல்கள் எல்லாம் சைன நூல்களாக இருக் கின்றன. தொல்காப்பியர்திருவள்ளுவர்சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கதேவர்யாப்பருங்கல ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு இலக்கண நூல் களை எழுதின ஆசிரியர்கள் ஆகிய பலரும் சைனர்கள்.  இந்த சைன மரபு தொடர்ச்சியைப் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை பார்க்கின்றோம்.  நமக்கு மிகப் பெருந்தொகையான நூல்கள் மறைந்துபோன பின்பும் இந்தத் தொடர்ச்சி மிகத் தெளிவாகத் தெரிய வருகின்றது.
மணிமேகலைநீலகேசி ஆகியவற்றில் ஒரு தருக்க முறையைக் காண்கிறோம்.  இந்த நூல்களில் தத்துவவாதி’ என்று சொல்லமாட்டார்கள்சமய வாதி என்பார்கள்;  சமயக்கணக்கர் என்பார்கள்.  இந்த நூல்களில் தருக்கம் செய்யும் மனிதர்களைக் காண்கிறோம்.  தருக்கம் செய்யும் இடங்களாகப் பட்டிமண்டபங்கள் இருக்கின்றன.  இந்த நூல்களின் விவரங்கள் எல்லாம் வடமொழியில் பதிவாகியுள்ள விவரங்களுடன் ஒத்துப் போகின்றன. இந்த விவாத / தருக்க முறை புலமை சார்ந்ததாகக் காணப்படு கின்றது.
தருக்க / விவாத முறையைத் தொகுத்து ஒழுங்கு படுத்தியவர்கள் யாரென்று பார்த்தால் தமிழர் களாக இருப்பதைக் காண்கிறோம்.  இந்தியத் தருக்க முறை விரிவாகநுணுக்கமாகத் தொகுத்துத் தரும் நியாயப்பிந்து’  நூலின் ஆசிரியர் தர்மகீர்த்தி.  அவர் தமிழர்.  காஞ்சிபுரம் நகரைச் சார்ந்தவர்.  இதன் மூலம் தருக்க முறை தமிழகத்தில் உருவாகிஇந்தியா முழுவதும் பரவி இருக்கின்றது என்பது தெரிகின்றது.  பௌத்தசைன சிந்தனைகள் தமிழகத்தில் வளர்ச்சியடைந்த போது பாலிமகதிவடமொழி ஆகியவற்றில் பலர் நூல்களை இயற்றி இருக்கின்றார்கள்.  இதைப் பற்றிய விவரங்களை மயிலை சீனி. வேங்கடசாமி தன் நூல்களில் பதிவு செய்திருக்கின்றார்.  இப்படி பாலி,மகதிவட மொழி ஆகியவற்றில் நூல் இயற்றியவர்கள் காஞ்சி புரம்,திருப்பாதிரிப் புலியூர் (கடலூர்) முதலான நகரங்களைச் சார்ந்தவர். தமிழகத்தைச் சேர்ந்த புத்ததத்தர் இன்று இலங்கையில் இருக்கின்ற தேரவாத பௌத்தத்திற்கு அடிப்படை நூல்களை இயற்றியவர்.  இதைப் போன்றே சீன,ஜப்பான் ஆகிய நாடுகளில் பௌத்த மதத்தைப் பரப்பியவர் காஞ்சிபுரத்தைச் சார்ந்த இளவரசர் என்ற தொல் மரபுக்கதை இருக்கின்றது.  யுவான் சுவாங்இட் சிங் போன்ற சீனப் பயணிகளும் புனித நூல்களைத் தேடித் தமிழகத்திற்கு வந்த செய்திகளையும் அறிகின்றோம்.  இந்தப் பயணிகளின் குறிப்புகள் நம் வரலாற்றை எழுதுவதற்கான சான்றுகளாகவும் இருக்கின்றன. இவையெல்லாம் இங்கு ஒரு வளமான சிந்தனை மரபுகல்விப்புலம் இருந்ததைத் தெளிவாகக் காட்டுகின்றன.
இந்தக் கல்விப் புலத்தின் வெளிப்பாடுகளாக மணிமேகலைநீலகேசிபின்பு சிவஞான சித்தியார் பரபக்கம் ஆகியவற்றைக் காணமுடிகிறது. இவற்றில் இந்தியச் சிந்தனை மரபுகள்சமயங்கள் தொகையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.  இவற்றில் முறையே பத்துஆறுபதினான்கு சிந்தனை மரபுகள் / சமயங்கள் பதியப்பட்டிருக்கின்றன.  இப்படிப் பெருந்தொகை யான பதிவை வடமொழியில் சர்வதரிசன சங்கிரகம் என்ற நூலில்தான் காண்கிறோம்.  இந்த நூல் விஜய நகர அரசை நிறுவிய புக்கர்,ஹரிகரர் மன்னர் களுடன் தொடர்புடைய வித்யாரண்யர் எனப்படும் மாதவரால் இயற்றப்பட்டது.  ஆகவே இந்நூலின் காலம் கி.பி. பதினான்காம் நுற்றாண்டு என்பது தெளிவாகத் தெரிகின்றது.  இந்த நூலையே இந்திய மெய்யியல் வரலாறு எழுதும் பெரும்பாலான
அறிஞர்கள் அடிப்படையாகக் கொள்கின்றனர்.  சர்வ தரிசன சங்கிரகத்தை விடத் தெளிவாகநுணுக்கமான விவரங்கள் வெகுகாலத்திற்கு முன்பே தமிழ் நூல் களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.  அவை யெல்லாம் இராதாகிருஷ்ணன்தாஸ்குப்தாதேவி பிரசாத் சட்டோபாத்யாயா போன்ற அறிஞர் களின் கவனத்திற்குக் கொண்டு சேர்க்கப்படவில்லை.  இதற்கெல்லாம் தமிழ் மேன்மை பேசிய புலமை மரபுதான் காரணம்.
தருக்கத்தின் பிற்கால வளர்ச்சி என்னவாக இருந்தது?
இங்குத் தருக்கம் முறையாக வளர்ச்சி அடைந் திருந்தால் ஐரோப்பிய மறுமலர்ச்சி நிலை போன்ற ஒரு நிலையை நாம் எட்டியிருப்போம்.  தருக்கம் வளர்ச்சி அடையவில்லை;  வளர்ச்சி அடையவும் விடவில்லை. தருக்கவாதிகளை வேதநெறியாளர்கள் எவ்வாறு இழிவுபடுத்தினார்கள்ஒடுக்கினார்கள் என்பதைப் பற்றியெல்லாம் சட்டோபாத்யாயா எழுதியுள்ளார். இங்குத் தருக்க முறைகூட சமயம் சார்ந்த விசயங்களை விவாதிப்பதற்குத் தானே தவிரசமயத்திலிருந்து விடுபட்ட விஷயங்களை விவாதிப்பதற்கு அல்ல.
மாணிக்கவாசகர் படித்துதருக்கம் செய் கிறவர்களுடன் சேரக் கூடாது;  விலகி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.  தருக்கம் செய்தால்படித்தால் சந்தேகம் வரும்சந்தேகம் வந்தால் கடவுள் மீதான முழு நம்பிக்கையில் குறைவு ஏற்படும் என்று மாணிக்கவாசகர் கருதுகின்றார்.  வடமொழி வேதநெறியாளர்கள் போன்றே இங்கும் தருக்கம் அருவருப்பாகப் பார்க்கப்பட்டது;  கடவுள் நம்பிக்கைக்கு விரோதமானதாகப் பார்க்கப்பட்டது.
இதன் விளைவாகமணிமேகலைநீலகேசி ஆகியவற்றில் காணப்பட்டதைப் போன்ற வளர்ச்சி யடைந்த தருக்கத்தைப் பிற்காலங்களில் காண முடியவில்லை. பிற்காலத்தில் சிவஞான சித்தியார் பரபக்கம் பிற மதங்களை மறுத்துப் பேசுகிறது.  ஆனால் சிவஞான சித்தியாரில் உள்ளதைத் தருக்கம் என்று சொல்வது சற்று சிரமமானது.  ஏனென்றால் சித்தியார் தனக்கு எதிரான கொள்கைகளை அதுவே கட்டுரைத்து மறுக்கின்றது.  அப்படிப் பிற கொள்கைகளைக் கட்டுரைக்கும்போது தனக்கு வசதியாக இருக்கும்படியே கட்டுரைக்கின்றது.  மணிமேகலையிலும்நீலகேசியிலும் உள்ள தெளிவு,நுணுக்கம் சித்தியாரில் இல்லை.  ஓர் உதாரணம்.  அஜீவகர்களைச் சித்தியார் சமணர்களுடன் சேர்த்துக் குழப்புகிறது.  சமணம் பற்றிக் கூடத் தெளிவில்லை. அக்காலத்தில் தருக்கம் எதார்த்தமான நடைமுறையில் இங்கு இல்லை என்பது நமக்குத் தெரிகின்றது.
முன்பே கூறியபடி தருக்கம் இறையியல் சார்ந்த தாகவே இருந்தது. தருக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அறிவியலை நோக்கி நாம் முன்னேற வில்லை.  தருக்கம் இங்கு நம்பிக்கையை வலியுறுத்தி யதே தவிர,ஆராய்ச்சியை வலியுறுத்தவில்லை. அதனால் இந்தியாவின் சிறந்த தருக்கவாதியான தர்மகீர்த்தி தமிழர் என்று நாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும்அதே நேரத்தில் தருக்க வளர்ச்சியின் வரலாற்றுப் பயனைத் தமிழர்கள் அடையவில்லை என்பதும் உண்மை.
தருக்கத்தை மறுத்த பக்தி இயக்கம் எதனை முன்வைத்தது?
பக்தி இயக்கம்’ என்பது இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர்கள் வைத்த பெயர்.  அதனை ஓர் இயக்கமாக நாம் பார்க்க முடியாது.  அது சிவன் அல்லது திருமாலைப் போற்றிப் பரவிய இசைப்பாடல் மரபு மட்டுமே.  இந்த இசைப்பாடல் மரபை ஓர் இயக்கமாகஅதாவது ஒரு‘movement’  ஆகக் கருதமுடியாது.  இந்த இசைப் பாடல் மரபு நம்பிக்கையை வலி யுறுத்தியது;  உணர்ச்சிமயமான பரவச நிலையை உருவாக்கியது.
இந்த இசைப்பாடல் மரபின் தொடக்க காலம் மணிமேகலைநீலகேசி ஆகியவற்றின் காலம்.  மணி மேகலைநீலகேசி ஆகியவற்றில் ஒரு வளர்ச்சி யடைந்த தருக்கமுறையைப் பார்க்கிறோம்.  இந்தக் கேள்வி கேட்கும் தருக்கமுறையை மறுத்து நம்பிக் கையை முன்வைக்கிறது.  வேறு மாதிரியாகச் சொன்னால் மக்கள் தன்னிலை ஆட்களாக இல்லாமல்,உணர்ச்சிப் பிரவாக நிலையில் பிறருடைய பேச்சுகளுக்குக் கீழ்ப்படும் தன்னிலை இழந்த ஆட்களாக மாறுகிறார்கள்.  தன்னிலை இழந்த உணர்ச்சிப் பிரவாக நிலையை உருவாக்கு வதற்கு இசைப்பாடல் முக்கியமாகப் பங்கு ஆற்று கின்றது.  பரவசப்பட்ட மனிதர்களை உருவாக்கு கின்றது.
பரவசப்பட்ட மனிதர்கள் தமக்கு முன்னால் இருக்கும் மனிதர்கள் கூறுவதையெல்லாம் நம்பினார்கள்அவர்களைத் தெய்வப் பிறவி களாகக் கருதினார்கள். உதாரணமாகதிருஞான சம்பந்தர் தான் அம்மையின் முலைப்பால் அருந்தி யதால் ஞானசம்பந்தன் என்று பெயர் பெற்றதாகக் கூறுகிறார். இந்தக் காலத்திற்கு முன் ஒரு மனிதரைப் பற்றிய அதீதக் கதைகளைப் பிறர் கூறக் கேட்கிறோம்.  இங்குக் கதையோடு சம்பந்தமுடைய மனிதரே கூறுகின்றார். இதைப் பற்றி வெள்ளைவாரணர் ஐயாவிடம் கேட்டேன். ஆமாம் தம்பி இதிலெல்லாம் ஏதோ பிரச்சினை இருக்கு”  என்று அவர் கூறினார். ஆழ்வார்கள்நாயன்மார்கள் பாடல்களுக்கு வேதநெறிதான் அடிப்படை. 
அவர்கள் பல்லாயிரம் முறை வேதங்களைப் போற்றுகிறார்கள்.  நால்வருணக் கோட்பாட்டைப் போற்றுகிறார்கள்.  இதைப் பற்றியெல்லாம் தேவார ஒளிநெறி”  என்னும் நூலில் செங்கல்வராயப் பிள்ளை தெளிவாகக் கூறியுள்ளார்.  இப்படி இருக்கும்போது நமக்கு அடிப்படையான கேள்வியொன்று எழுகிறது.  இந்த இசைப் பாடல் மரபு தமிழர்களைச் சைவர் களாகவைணவர்களாக ஒன்றுதிரட்டியதா?  இல்லை என்னும்போது எப்படி அதை ஓர் இயக்கமாகக் கருத முடியும்.  இயக்கம் என்பது முரண்பாடு களைக் களைந்து ஒற்றுமையை உருவாக்குவது.  புதிய நிலைமைகளை உருவாக்குவது.
இந்த இசைப் பாடல் மரபு பற்றிச் சரியான புரிதலுக்குத் தேவையான ஆய்வுகளைச் செய்த வர்கள் ஸ்பென்சர் முதலான சில வெளிநாட்டவர்கள். ஆழ்வார்கள்நாயன்மார்கள் பாடிய தலங்களை எல்லாம் காட்டும் ஒரு வரைபடம் தயாரித்தனர்.  அப்படிப் பார்க்கும்போது இந்த ஊர்கள் எல்லாம் நன்செய் ஊர்கள்அதிக நெல் விளைச்சல் தருபவை.  இப்போது ஒரு விசயம் தெளிவாகிறது. உபரி உற்பத்தி கிடைக்கும் பகுதிகளில் இருந்த கோயில் தலங்களைப் புனிதப்படுத்தவும்வலுவாக்கவுமே இந்த இசைப் பாடல் மரபு நடைபெற்றிருக்கிறது.  நன்செய் நிலங்கள் எல்லாம் கோயில்களுடன் இணைக்கப்பட்டிருந்தன என்ற செய்தியும் முக்கிய மானது.  இன்னொரு வகையில் கோயில்கள் நிர்வாகத் தலங்களாகவும்நியாயத் தலங்களாகவும் விளங்கின என்பதும் முக்கியமானது.  தமிழ் நாட்டில் வேளாண் வளர்ச்சியின் போது கிடைத்த உபரியைப் பகிர்ந்து கொண்ட வர்க்கங்களின் / சாதிகளின் இலக்கிய நடவடிக்கையே பக்தி இசைப் பாடல் மரபு.
பக்தி இசைப் பாடல் மரபை அடிப்படையாகக் கொண்டெழுந்த விசிஷ்டாத்வைதம்சைவசித்தாந்தம் ஆகியவை தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு செயல் பட்டன?
இராமானுசர் ஆழ்வார்கள் பாடல்களைக் கொண்டே விசிஷ்டாத்வைதத்தை உருவாக்கினார்.  இராமானுசர் பற்றிய மரபுக் கதைகளிலிருந்து நமக்கு ஒரு விசயம் தெரிய வருகிறது. அவர் சாதிவருண முறையை எதிர்த்ததாகவும்,அதனால் சோழப் பேரரசின் சினத்திற்காளாகி கர்நாடகத்திற்கு ஓடி விட்டதாகவும் அந்தக் கதை சொல்லுகிறது.  தமிழக வரலாற்றில் முதன்முதலாக சாதி கடந்த மதரீதியான ஒருங்கிணைப்பு ஏற்படுத்த இராமானுசர் முயன்று உள்ளார் என்று தெரிய வருகிறது.  இராமானுசரைத்தொடர்ந்து சைவத்திலிருந்து சாதிப் படிநிலையை எதிர்த்து வீர சைவம் கிளைத்து எழுகிறது.
இந்தியாவிலேயே சாதி கடந்த மதம் சார்ந்த மக்களை ஒருங்கிணைக்க முயன்ற முதல் மனிதராக இராமானுசர் திகழ்கின்றார்.  இராமானுசர்வீர சைவத்தை நிறுவிய வசவர் பற்றிய கதைகளெல்லாம் நமக்கு ஒரு விஷயத்தைக் காட்டுகின்றன.  அப்போது சாதி கடந்த ஒருங்கிணைப்பை வன்மையாக எதிர்த்த அரசுகள் இருந்திருக்கின்றனஆளுங் குழுக்கள் இருந்திருக்கின்றன.  அரசுகளும்ஆளும் குழுக்களும் அவற்றை வன்முறையில் ஒடுக்கியிருக்கின்றன.  அதனால் சாதிவருண முறையை எதிர்த்த சித்தாந்தங்கள் சமரசம் செய்து கொண்டன. தமிழ் நாட்டில் நடந்த குகை இடி கலகங்கள் கூட இதையே நமக்குச் சொல்கின்றன.   குகைகள் சைவ சூத்திரர்களின் சமயம் சார்ந்த இடங்கள் ஆகும்.  விசிஷ்டாத்வைதம் உருவான இருநூறு ஆண்டு களுக்குப் பின்புதான் சைவ சித்தாந்தம் உருவா கின்றது.  சைவ சித்தாந்தம் பார்ப்பனர்களுக்குக் கிடைத்த சமயத் தலைமை சூத்திரர்களான வேளாளர் களுக்கு வேண்டுமென்று கோருகின்றது.  இந்தப் பின்னணியில் சைவவைணவ நடைமுறைகளில் உள்ள சாதிவருண நெகிழ்ச்சியைப் புரிந்துகொள்ள வேண்டும்.
விசிஷ்டாத்வைதம்சைவ சித்தாந்தம் இவ்வாறு எதிர்ப்புக்கு ஆளான போது,அவர்கள் சில சமரசம் செய்துகொள்ள வேண்டி வந்தது.  அவர்கள் சொன்னார்கள்  நாங்கள் பேசுவதும் வேதாந்தம் தான்.  சைவ சித்தாந்திகள் தாங்கள் சொல்வதே சுத்த வேதாந்தம் என்று சொன்னார்கள்.  அதனால் இக்காலத்தில் வேதாந்தம் பற்றித் தமிழில் ஏராள மான நூல்கள் வெளிவந்தன. கீதை மொழிபெயர்க்கப் பட்டது.  ரிபுகீதை என்ற வேதாந்த நூல் 18-ஆம் நூற்றாண்டு வரை அதிகமான தமிழ் மாணவர் களால் பயிலப்பட்டது. கைவல்ய நவநீதம் சங்கர வேதாந்தத்திற்குப் பொழிவான மொழிபெயர்ப்பு. மறைமலையடிகள் வேதாந்தம் எங்கள் சொத்து என்றார்.  பார்ப்பனர்கள் சைவ சித்தாந்தத்தைச் சூத்திர வேதாந்தம் என்றார்கள்.
இந்திய மெய்யியல் மரபுகளின் மையப் போக்கு களிலிருந்து விலகி நிற்கின்ற தமிழ்ச் சித்தர்கள் பற்றிக் கூறுங்கள்?
சித்தர்கள் தமிழ்ப் புலமை மரபில் அண்மைக் காலம் வரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.  தமிழ் மக்கள் மரபில்தான் சித்தர்கள் பற்றிய செய்திகள் இருக்கின்றன.  சித்தர் பாடல்களுக்கு நல்ல பதிப்புகள் எவையும் இல்லை.  சித்தர்கள் பற்றிய பேச்சே இன்றைக்கும் நாட்டுப்புறக் கதைகள் போலத்தான் இருக்கின்றது.
சித்தர்கள் பாடல்கள் சமயத்திற்கு எதிரானதாக இருக்கின்றது.  சாதிக்கு எதிரானதாக இருக்கின்றது.  சமூக அவலங்கள் பற்றிய பேச்சாக இருக்கின்றது. நிறுவனமயப்பட்ட சமயங்கள்கொள்கைகள் போன்று சித்தர்கள் தம்மை நிறுவனமயப்படுத்திக் கொள்ளவில்லை.  சித்தர்கள் பலர் ஒன்றுசேர்ந்து வேலைகள் செய்ததாகச் செய்திகள் இல்லை.   சித்தர்கள் இன்னார் என்று இன்று வரை நம்மால் வரையறுக்க முடியவில்லை.  சித்தர்களுடைய கொள் கைகளுக்கு இந்திய மெய்யியல் போக்குகளுக்கு உள்ளகுறிப்பாகத் தாந்திரிகத்திற்கும்சாங்கியத் திற்கும் உள்ள தொடர்பு பற்றியெல்லாம் பேசு வதற்கு நமக்குப் போதுமான ஆய்வுகள் இன்னும் செய்யப்படவில்லைபாடல்கள் ஒழுங்குபடுத்தப் படவில்லை.  இவையெல்லாம் செய்தால் பேச முடியும்.  அதற்கு முன் சொல்லப்படுவதெல்லாம் வெறும் அபிப்பிராயங்களாக மட்டுமே இருக்கும்.
மையப் போக்கிற்கு முற்றிலும் எதிரான பூத வாதிகள் / உலகாயதர்கள் தமிழ் மரபில் எவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறார்கள்?
பூதவாதிகள் / உலகாயதர்கள் எழுதிய நூல்கள் தமிழிலும் இல்லை.  இவர்கள் பற்றிய முதல் குறிப்பு மணிமேகலையில் கிடைக்கிறது.  அடுத்து நீல கேசியிலும் வருகின்றது.  உலகாயதர்கள் பற்றித் தமிழ் மரபில் ஒரு விஷயம் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது.  கடவுள் பேரில் மக்களை மோசடி செய்தவர்களைத் தாக்குவதற்குதோலுரித்துக் காட்டு வதற்கு பூதவாதிகள் / உலகாயதர்கள் கடவுளையே மறுத்தார்கள்.  அவர்கள் பெரும்பாலும் திதி சடங்கைக் கிண்டல் செய்தார்கள்.  கடவுள் இருக்கிறது என்று சொல்பவர்கள் ஏராளமாகப் பொய் சொல்லு கிறார்கள் என்பதைக் காட்டினார்கள்.  கடவுள் இருக்கிறது என்பதையும் மெய்ப்பிக்க முடியாது என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.  கடவுள் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு பார்ப் பனர்கள் செய்யும் மோசடிகளைத் தோலுரித்துக் காட்டினார்கள்.
ஆனால் கடவுள் பற்றிய கருத்து உலகளாவி யதாக இருக்கின்றது.  பழங்குடி மக்களிடமும் கடவுள் உண்டு.  ஆனால் நிறுவனமயப்பட்ட கடவுள்கள் போன்று இல்லை.  அந்தக் கடவுள்கள் பழங்குடி மக்களுடன் வாழ்ந்தும்,இணைந்து போராடியும்அவர்களுக்கு உதவும் பண்பு கொண்டவை.  இன்னும் கூடத் தமிழக மக்களிடம் குலதெய்வ வழிபாடே மேலோங்கி இருக்கிறது.
தமிழக மக்கள் தம் வேண்டுதல்களைக் குல தெய்வங்களிடம்தான் கேட்பார்கள்.  அதற்கப்புறம் அம்மன்கள்அதற்கப்புறம் முருகன். தமிழ்நாட்டின் பெருந்தெய்வங்களான சிவன்விஷ்ணு கோயில் களில் தம் வேண்டுதல்களைக் கேட்க மாட்டார்கள்.  இப்போது திருப்பதிக்குச் சென்று வேண்டும் பழக்கம் இங்கு உண்டு.  இது அந்தக் காலத்தில் இருந்ததா என்று தெரியவில்லை.
இதை ஏன் சொல்கிறேன் என்றால்தேவி பிரசாத் சட்டோபாத்யாயா பண்டைய இந்தியாவில் உலகாயதம் என்பது தொல்-தாந்திரிகம்தான் என்று கூறியுள்ளார்.  இன்றும் கூட இவ்வுலக வாழ்வு  நலன் சார்ந்த சடங்குகள்,நடைமுறைகள் குல தெய்வ வழிபாட்டில்தான் இருக்கின்றன.  அங்கு தான் கள்மாமிசம்ஆண்-பெண் இன்ப நுகர்வு எல்லாம் ஏற்கப்படுகின்றன.  ஒரு மெய்யியல் முறை யாக இல்லையென்றாலும் தமிழக மக்களிடையே இவ்வுலகு சார்ந்த சிந்தனை குலதெய்வ வழிபாட்டில் வலிமையாக இடம்பெறுகிறது.  சிவஞான சித்தியார் 26ஆம் பாட்டில் உலகாயதத்தையும்,வாமத் தந்திரியையும் இணைத்துப் பார்க்கிறார் அருள் நந்தி சிவாச்சாரியார். இந்தப் பழங்குடிச் சிந்தனை களை உள்வாங்கிக் கொண்டதுதான் சாங்கியம். உலகாயதர்கள்சாங்கியர்கள் அமைப்பாகச் செயல்பட்டதாக எங்கும் செய்திகள் இல்லை.  கடவுள் மறுப்பு என்னும் விஷயத்தை முதன்முதலாக அமைப்புரீதியாக மக்களிடையே எடுத்துச் சென்றவர் பெரியார் மட்டுமே